அவசரப்பட்ட்டுடியே குமாரு காய்கறி வியாபாரியிடம் கைவரிசை….! 2 திருடர்கள் சிறையில் அடைப்பு….!

ஆவடியை அடுத்துள்ள பொத்தூர் பகுதியைச் சேர்ந்த கண்ணன் (45) என்ற நபர் காய்கறி வியாபாரம் செய்து வருகின்றார். இவர் நேற்று மாலை திருமுல்லைவாயிலில் ஆல் இந்தியா ரேடியோ ஸ்டேஷன் அருகே மிதிவண்டியில் காய்கறி வியாபாரம் செய்து கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக எதிரே வந்த 2 மர்ம அவர்கள் இவரை வழிமறித்து 500 ரூபாய் பணத்தை பறித்துக் கொண்டு அங்கிருந்து தப்பிச் சென்றனர். இது தொடர்பாக உடனடியாக திருமுல்லைவாயில் காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் கண்ணன்.

அவருடைய புகாரை அடிப்படையாகக் கொண்டு காவல்துறையினர் அந்த பகுதியில் இருக்கக்கூடிய கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து மர்ம நபர்களை தேடி வந்தனர். அதில் அம்பத்தூர், கள்ளிகுப்பம் பகுதியைச் சேர்ந்த அஜய் என்ற அஜித்குமார்(26) மற்றும் சந்தோஷ்குமார் (19) உள்ளிட்ட இருவரும் தான் இந்த செயலில் ஈடுபட்டார்கள் என்பது தெரிய வந்தது. இருவரையும் ஆய்வாளர் கிருஷ்ணகுமார், ஜெயகிருஷ்ணன் உள்ளிட்டோர் தலைமையிலான தனிப்படை காவல்துறையினர் தேடி வந்தனர்.

இந்த சூழ்நிலையில் தான் இவர்கள் பாரிமுனை கொத்தவால் சாவடி அருகே பதுங்கி இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. அதனை அடிப்படையாகக் கொண்டு சுற்றி அழைத்து இருவரையும் கைது செய்த காவல்துறையினர் அவர்களிடமிருந்து 18 கைபேசிகளை பறிமுதல் செய்தனர். இதனை தொடர்ந்து இருவரையும் அம்பத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தி புழல் சிறையில் அடைத்திருக்கிறார்கள். இவர்கள் மீது ஏற்கனவே ஆவடி, அம்பத்தூர், திருமுல்லைவாயில், திருவேற்காடு போன்ற பல்வேறு காவல் நிலையங்களில் திருட்டு வழக்கு நிலுவையில் இருப்பது குறிப்பிடத்தக்கது.

Next Post

ஜிஎஸ்டி விதிமீறல்..!! அதானி குழுமத்திற்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்..!! திடீர் ரெய்டு..!!

Thu Feb 9 , 2023
அதானி வில்மர் நிறுவனத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதால் ஜிஎஸ்டி துறை அதிகாரிகள் சோதனை நடத்தியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஹிண்டன்பர்க் அறிக்கையின் விவகாரத்தால் பங்குச்சந்தையில் சரிவை சந்தித்து வந்த அதானி குழுமம், கடந்த 2 நாட்களாக 2 வர்த்தக பிரிவுகளில் ஏற்றத்தை கண்டது. இந்நிலையில் தான் அதானி குழுமத்தின் மற்றொரு விதிமீறல் செயல்பாடாக, அதானி வில்மர் குழுமத்தில் ஜிஎஸ்டி விதிமீறல் நடந்திருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. தற்போதைய தகவல்படி, இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள […]
ஜிஎஸ்டி விதிமீறல்..!! அதானி குழுமத்திற்குள் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள்..!! திடீர் ரெய்டு..!!

You May Like