23 வயது பெண்ணுக்கு சிறுவன் உட்பட 6 பேரால் நடந்த கோர சம்பவம்.!

மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.

சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்து இன்று காலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, போலீசார் சிறுவன் உள்பட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.

அந்த ஆறு பேரில் ஒருவர் அந்த கட்டிடத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி இருந்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த ஆறு பேரில் ஒருவர் பதினாறு வயது சிறுவன் என்பதும் தெரிய வந்திருக்கிறது.

இக்கோர சம்பவத்தை தொடர்ந்து கோட்வாலி போலீசார் அந்த ஆறு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Baskar

Next Post

’கல்யாணம் ஆகி ரெண்டே மாசத்துல ’!!  குட்நியூஸ் சொன்ன மகாலட்சுமி-ரவீந்தர்

Sat Oct 29 , 2022
வி.ஜே.வாக அறிமுகம் ஆகி சீரியல்களில் நடித்து பிரபலமானவர் மகாலட்சுமி. இவர் தயாரிப்பாளர் ரவீந்தரை காதலித்து திருமணம் செய்து கொண்ட இரண்டே மாதத்தில் குட் நியூசை மகிழ்ச்சியாக பகிர்ந்துள்ளார். மகாலட்சுமிக்கும் – ரவீந்தருக்கும் கடந்த ஆகஸ்ட் மாத இறுதியில்தான் திருமணம் நடந்தது. முழுமையாக இரண்டு மாதங்கள் முடிந்திருக்கும். திருமணம் ஆன முதல் நாளை இஸ்டாகிராமில் புகைப்படத்தை வெளியிட்டு அதிகாரப்பூர்வ அறிவிப்பை இவர்கள் வெளியிட்டனர். இதையடுத்து இவர்கள் ஏராளமான விமர்சனங்களை சந்திக்க நேரிட்டது. […]

You May Like