மத்திய பிரதேச மாநிலத்தில் திகாம்கர் என்ற பகுதியில் நேற்று இரவில் கட்டுமான பணிகள் நடந்து வந்த நிலையில், ஒரு கட்டிடத்தில் மது போதையில் இருந்த ஆறு பேரும் 23 வயதுள்ள இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்கொடுமை செய்துள்ளார்கள்.
சத்தர்பூர் என்ற மாவட்டத்தில் இருந்து கூலி வேலை செய்வதற்காக அந்த இளம் பெண் அழைத்துவரப்பட்டார். கூலி வேலைக்காக அழைத்து வரப்பட்ட அந்த பெண்ணுக்கு நேர்ந்த கொடூரத்தை அடுத்து இன்று காலையில் பாதிக்கப்பட்ட அந்தப் பெண் போலீசில் சென்று புகார் அளித்திருக்கிறார். அதனை தொடர்ந்து, போலீசார் சிறுவன் உள்பட ஆறு பேரையும் கைது செய்துள்ளனர்.
அந்த ஆறு பேரில் ஒருவர் அந்த கட்டிடத்தில் வாட்ச்மேனாக பணியாற்றி இருந்துள்ளார் என்பது தெரிய வந்ததுள்ளது. மேலும் அந்த ஆறு பேரில் ஒருவர் பதினாறு வயது சிறுவன் என்பதும் தெரிய வந்திருக்கிறது.
இக்கோர சம்பவத்தை தொடர்ந்து கோட்வாலி போலீசார் அந்த ஆறு பேரிடமும் விசாரணை நடத்தி வருகின்றனர்.