மதுரை மாவட்டம் திருமங்கலத்தை அடுத்துள்ள கூடக்கோவில் பகுதியைச் சேர்ந்த ஒரு முதியவருக்கு 4 மகள்கள் 1 மகன் உள்ளிட்டோர் இருந்திருக்கிறார்கள். கடந்த சில நாட்களுக்கு முன்னர் ஏற்பட்ட சாலை விபத்தின் காரணமாக, முதியவரின் மகன் மரணம் அடைந்தார்.இதனை அடுத்து ஆண் வாரிசு இல்லாத காரணத்தால் தான் இரண்டாவதாக திருமணம் செய்து கொள்ள தவறாக தன்னுடைய மூத்த மகளிடம் முதியவர் தெரிவித்திருக்கிறார்.
இதனைக் கேட்டு அதிர்ந்து போன மூத்த மகள் யாரோ ஒரு பெண்ணை திருமணம் செய்து கொள்வதற்கு பதிலாக தன்னுடைய 16 வயது மகளை திருமணம் செய்து கொள்ளுமாறு தன்னுடைய தந்தைக்கு இன்ப அதிர்ச்சி வழங்கினார். இதனை ஏற்றுக் கொண்ட தாத்தா திருமணம் தொடர்பாக உறவினர்களிடம் பேசி அவர்களிடம் சம்மதம் பெரும் முயற்சியில் இறங்கினார்.
தன்னுடைய சொந்த தாத்தாவிற்கு தன்னை திருமணம் செய்து வைப்பதற்கு முயற்சிகள் நடப்பதை அறிந்து கொண்ட அந்த சிறுமி இது குறித்து தன்னுடைய அம்மாவின் தங்கை கணவரான சித்தப்பாவிடம் முறையிட்டிருக்கிறார்.
அதற்கு அந்த நபரோ நீ எதற்கும் பயப்பட வேண்டாம் எல்லாவற்றையும் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று சிறுமிக்கு ஆதரவாக பேசும் வகையில் பேசி அவரிடம் ஆசை வார்த்தை கூறி அவரை பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார்.
அதோடு சிறுமியிடம் பலமுறை பாலியல் ரீதியாக அத்துமீறுவதை அவர் வழக்கமாகக் கொண்டிருந்ததாக சொல்லப்படுகிறது ஒரு நாள் சிறுமியும், அவருடைய சித்தப்பாவும் தோட்டத்தில் தனிமையில் இருந்ததை அவருடைய தாய் பார்த்து அதிர்ச்சிக்கு உள்ளானார். அந்த விவகாரத்தை வெளியே சொல்ல வேண்டாம்.
ஆண் வாரிசுக்காக தானே சிறுமையை தாத்தாவிற்கு திருமணம் செய்து வைக்க முயற்சி செய்கிறீர்கள் ஆண் வாரிசை நானே பெற்றுக் கொடுக்கிறேன், அதோடு உன்னுடைய வீட்டுச் செலவுக்கு பணம் கொடுக்கிறேன் சிறுமியை எனக்கு திருமணம் செய்து வைத்துவிடு என்று சித்தப்பா தெரிவித்திருக்கிறார்.
அவருடைய இந்த கோரிக்கைக்கு சிறுமியின் தாயாரும், தாத்தாவும் ஒப்புதல் வழங்கவே இந்த விவகாரம் வெளியில் தெரிந்தால் குடும்பத்திற்கு அவப்பெயர் உண்டாகிவிடும். ஆகவே நீங்கள் இருவரும் வெளியூரில் சென்று திருமணம் செய்து கொண்டு வாழ்க்கையை தொடங்குங்கள் யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக சிறுமியை காணவில்லை என்று காவல் நிலையத்தில் ஒரு புகாரை வழங்கி விடலாம் என்று முடிவு செய்த தாய் அதன்படி புகார் வழங்கியிருக்கிறார்.
அந்தப் புகாரை அடிப்படையாகக் கொண்டு விசாரணை செய்த காவல்துறையினர் அனைத்து உண்மைகளையும் தெரிந்து கொண்டு அதிர்ச்சியில் உறைந்தனர். கடைசியாக சிறுமியின் சித்தப்பா, தாய் மற்றும் தாத்தா உள்ளிட்ட மூவரையும் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர். சிறுமியை குழந்தைகள் காப்பகத்தில் ஒப்படைத்து இருக்கிறார்கள் காவல்துறையை சார்ந்தவர்கள்.