டெங்குவுக்கு 346 பேர் பலி !! கிடு கிடுவென உயரும் டெங்கு பாதிப்புகள் !!

டெங்குவுக்கு கடந்த சில ஆண்டுகளாக டெங்கு பாதிப்புகள் கிடுகிடுவென உயர்ந்து வரும் நிலையில் இறப்புகள் , பாதிப்புகள் குறித்த அறிக்கையை சுகாதாரத்துறை வெளியிட்டுள்ளது.

டெல்லி, உத்தரபிரதேசம் , மேற்கு வங்கம் உள்ளிட்ட பல மாநிலங்களில் கடந்த சில நாட்களாக டெங்கு பாதிப்புகள் திடீரென அதிகரித்துள்ளது. கடந்த சில ஆண்டுகளில் டெங்கு பாதிப்பு எண்ணிக்கை கணிசமாக உயர்ந்துள்ளது என்று அரசு தெரிவித்துள்ளது.


மேலும் , உத்தரபிரதேசம் , பஞ்சாப்  மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநில்களில் 2021ல் அதிகபட்சமாக டெங்குவால் மக்கள் கடும் பாதிப்பை சந்தித்தனர். உத்தரபிரதேசம் , பஞ்சாப் மற்றும் ராஜஸ்தான் மாநிலத்தில் 2021ல் 29750 , 23389 மற்றும் 20749 டெங்கு பாதிப்புகள் பதிவாகின.அதே ஆண்டில் டெல்லியில் 13089 பேர் கணிசமான அளவு பாதிக்கப்பட்டனர். 2021ல் நாடு முழுவதும் கணக்கிட்டபோது 1.93 லட்சம் பேர் பாதிக்கப்பட்டனர்.

2019ம் ஆண்டு 1.57 லட்சம் பேர் பாதிக்கப்பட்டிருந்த நிலையில் பெரும்பாலான பகுதிகளில் கோவிட் கட்டுப்பாடுகளால் 2020ம் ஆண்டில் குறிப்பிடத்தக்க அளவில் 44,585 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். என அரசு தகவல் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு டெல்லி , உ.பி. என மாநிலங்களில் பல நகரங்களில் டெங்கு எண்ணிக்கை அதிகரித்துள்ளது. அறிக்கையில் உள்ளபடி உ.பியில் இதுவரை 2,200 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். லக்னோவில் 300 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். டெல்லியில் 1000 பேர் டெங்குவால் பாதிக்கப்பட்டுள்ளதாக பதிவாகியுள்ளது. சமீபத்தில் தொடர் மழை காரணமாக  டெங்கு அதிக அளவில் பரவி வருவதாக மத்திய சுகாதாரத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 10 முதல் 15 சதவீதம் நோய் பரவலால் ஏற்படுகின்றது.

2020ல் 56 பேர் டெங்குவால் பலியானார்கள் 2019 ல் 166 பேர் இறந்தனர். 2021ல் டெங்குவால் இறந்தவர்கள் உள்பட இதுவரை 346 பேர் இறந்துள்ளதாக அதிகாரிகள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

திடீரென டெங்கு பாதிப்பு ஏற்பட்டு கிடுகிடுவென உயர்ந்துள்ள நிலையில் அனைத்து மாநிலங்களிலும் சுகாதாரத்துறை அதிகாரிகள் அலர்ட்டாகி உள்ளனர். கொசுக்களை ஒழிக்கும் முனைப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Next Post

பிரபல கேதார்நாத் கோவிலுக்கு ரோப் கார் வசதி.! பக்தர்கள் மகிழ்ச்சி.!

Sun Oct 16 , 2022
உத்தரகண்ட் மாநிலத்தின் கேதார்நாத்தில் அமைந்துள்ள மந்தாகினி ஆற்றங்கரையில் கார்வால் சிவாலிக் மலை தொடரில் பிரசித்தி பெற்ற கேதார்நாத் கோவில் அமைந்து இருக்கிறது.  வருடம் தோறும் இந்த கோவிலுக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வந்து செல்வார்கள். கருச்சட்டி பகுதிக்கு சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை மலை ஏறி நடந்து செல்ல வேண்டும்.  எனவே, இங்கே வயதான பக்தர்கள் உடல்நிலை சரியில்லாதவர்கள் யாரும் சென்று தரிசனம் செய்ய முடியாது. அத்துடன் பிற பக்தர்களும் […]
KEDHARNATH

You May Like