ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீயில் கருகி பலி!… குடும்பத் தகராறில் நிகழ்ந்த கொடூரம்!….கடலூரில் அதிர்ச்சி!

கடலூர் அருகே குடும்பத்தகராறில் 2 கைக்குழந்தைகள் உள்பட 4 பேர் தீயில் கருகி உயிரிழந்த சம்பவம் சோகத்தையும், அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.

கடலூர் செல்லாங்குப்பம் வெள்ளி பிள்ளையார் கோவில் பகுதியில் பிரகாஷ் – தமிழரசி தம்பதியினர் வசித்து வருகின்றனர். இவர்களுக்கு ஷாசினி என்ற 8 மாத குழந்தை உள்ளது. இந்தநிலையில், தமிழரசியின் அக்காவான தனலட்சுமி குடும்ப தகராறு காரணமாக கணவரை விட்டு பிரிந்து, தனது 4 மாத குழந்தையுடன் தமிழரசி வீட்டிற்கு வந்துள்ளார். இதையடுத்து, சேர்ந்து வாழ வருமாறு தனலட்சுமியிடம் அவரது கணவர் சமாதானம் பேசியுள்ளார். அப்போது, இருவருக்குமிடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.

இதில் ஆத்திரமடைந்த சற்குரு தான் கொண்டு வந்த பெட்ரோலை மனைவி தனலட்சுமி மற்றும் அவரது 4 மாத குழந்தை மீது ஊற்றியுள்ளார். மேலும், இதனை தடுக்க சென்றபோது தனலட்சுமியின் தங்கை தமிழரசி மற்றும் அவரது 8 மாத குழந்தை ஹாசினி மீதும் எதிர்பாராத விதமாக தீப்பற்றியது. பின்னர் சர்குருவும் பெட்ரோல் ஊற்றி தற்கொலைக்கு முயன்றுள்ளார். இந்த சம்பவத்தில் சற்குரு, தனலட்சுமி, 8 மாத கைக்குழந்தை மற்றும் 4 மாத கைக்குழந்தை உள்பட 4 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். காயமடைந்த தமிழரசி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இதையடுத்து, சம்பவ இடத்திற்கு சென்ற போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Kokila

Next Post

அட இது தெரியாம போச்சே...! வயோஸ்ரீ யோஜனா திட்டம் மூலம் மாதம் ரூ.15,000 கிடைக்கும்...! முழு விவரம்...

Thu Feb 9 , 2023
வறுமைக்கோட்டிற்குகீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகைசெய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’ திட்டத்தின் கீழ் இரண்டு லட்சத்திற்கும் அதிகமான முதியவர்கள் பயன்பெற்றுள்ளனர். வறுமைக்கோட்டிற்கு கீழ் வாழும் முதியவர்களுக்கான உதவிகள் மற்றும் பாதுகாப்பு உபகரணங்கள் வழங்க வகை செய்யும் ‘ராஷ்டிரிய வயோஸ்ரீ யோஜனா’- தேசிய முதியோர் திட்டத்தின் கீழ் இந்தியா முழுவதிலும் இருந்து 2,88,928 பேர் பலனடைந்துள்ளனர். இந்த்த் திட்டத்தின் கீழ் மாத வருமானம் ரூ.15,000-க்கு மிகாமல் […]

You May Like