சேலம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை பகுதியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்த அவரது தம்பி, இவர்களின் நண்பர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி 8ம் வகுப்பு படித்து வந்தனர். மற்றொரு மாணவர் ரெட்டியூரைச் சேர்ந்தவர் அவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.
இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. மாணவர்கள் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து எங்களை தேட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.
எனினும் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செல்போன் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.
பள்ளிக்கு சென்ற மாணவர்கள் திடீரென மாயமானதால் எதனால் இப்படி செய்தார்கள் என பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அல்லது வேறு யாராவது கடத்திச்சென்றார்களா? எனவும் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.