பள்ளி மாணவர்கள் 5 பேர் மாயம்… போலீஸ்  தீவிர விசாரணை…

சேலம் மாவட்டத்தில் ஒரே பள்ளியில் படிக்கும் 5 மாணவர்கள் மாமானது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சேலம் மாவட்டத்தில் உள்ள நகரமலை பகுதியில் ஒரே ஊரைச் சேர்ந்த 5 மாணவர்கள் ஒரே பள்ளியில் படித்து வந்தனர். பத்தாம் வகுப்பு படிக்கும் மாணவன் மற்றும் 8ம் வகுப்பு படித்து வந்த அவரது தம்பி, இவர்களின் நண்பர் அதே பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வந்தார். இவரது தம்பி 8ம் வகுப்பு படித்து வந்தனர். மற்றொரு மாணவர் ரெட்டியூரைச் சேர்ந்தவர் அவர் அதே பள்ளியில் 8ம் வகுப்பு படித்து வந்தார்.

இந்நிலையில் நேற்று முன்தினம் பள்ளிக்கு சென்ற மாணவர்கள் வீடு திரும்பவில்லை. இதனால் பெற்றோர்கள் எங்கு தேடியும் அவர்கள் கிடைக்கவில்லை. மாணவர்கள் பெற்றோருக்கு அழைப்பு விடுத்து எங்களை தேட வேண்டாம் என தெரிவித்துள்ளனர்.

எனினும் அதிர்ச்சியடைந்து காவல்நிலையத்தில் புகார்அளித்தனர். அந்த எண்ணுக்கு தொடர்பு கொண்ட போது ஸ்விட்ச் ஆப் செய்யப்பட்டது.அதிர்ச்சி அடைந்த பெற்றோர்கள் அழகாபுரம் காவல்நிலையத்தில் புகார் அளித்தனர். போலீசார் செல்போன் எண்ணை வைத்து தேடி வருகின்றனர்.

பள்ளிக்கு சென்ற மாணவர்கள் திடீரென மாயமானதால் எதனால் இப்படி செய்தார்கள் என பெற்றோர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். அல்லது வேறு யாராவது கடத்திச்சென்றார்களா? எனவும் பெற்றோர்கள் அஞ்சுகின்றனர்.  

Next Post

கமல் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..? கோலிவுட்டில் பரபரப்பு..!! வெளியான முக்கிய தகவல்..!!

Sun Oct 30 , 2022
நடிகர் கமல்ஹாசன் படத்தை எச்.வினோத் இயக்கப் போவதாக வெளியாகியுள்ள தகவல் கோலிவுட்டில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. எச்.வினோத் இயக்கத்தில் அஜித் நடித்துள்ள துணிவு திரைப்படத்தின் இறுதிக் கட்ட பணிகள் முழுவீச்சில் நடந்து வருகின்றன. இந்தப் படம் பொங்கலுக்கு திரைக்கு வரவுள்ளது. நேர்கொண்ட பார்வை, வலிமை படங்களைத் தொடர்ந்து மூன்றாவது முறையாக துணிவு படத்தில் அஜித் – எச்.வினோத் கூட்டணி இணைந்துள்ளது. துணிவு படத்தை தொடர்ந்து எச்.வினோத் விஜய் சேதுபதியை இயக்குவார் […]
கமல் படத்தை இயக்கும் அஜித் பட இயக்குநர்..? கோலிவுட்டில் பரபரப்பு..!! வெளியான முக்கிய தகவல்..!!

You May Like