ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு லட்சக்கணக்கான குடும்பங்களுக்குப் புன்னகையை அளிக்கும் வகையில், 2021-22 நிதியாண்டில் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு சமமான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸ்க்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சனிக்கிழமை வெளியானது. தசரா பூஜை விடுமுறைக்கு முன்னதாக இந்த போனஸ் செலுத்தப்படும். மேலும் இந்த முடிவானது சுமார் 11.27 லட்சம் அரசிதழ் அல்லாத ரயில்வே ஊழியர்கள் பயனடைவார்கள்.
இதற்கான முக்கிய அறிவிப்பை ரயில்வே அமைச்சகம் ட்விட்டரில் வெளியிட்டுள்ளது. அந்த ட்வீட்டில், “ரயில்வேயின் உற்பத்தி மற்றும் செயல்திறனை அதிகரிக்க ஊக்கத்தொகை வழங்கப்படும். இதன் மூலம் 11.27 லட்சம் தகுதியுள்ள ரயில்வே ஊழியர்களுக்கு 78 நாள் ஊதியத்திற்கு இணையான உற்பத்தித்திறன் இணைக்கப்பட்ட போனஸுக்கு பிரதமர் நரேந்திர மோடி ஒப்புதல் அளித்துள்ளார். என தெரிவிக்கப்பட்டுள்ளது.
RPF, RPSF பணியாளர்களைத் தவிர்த்து அரசிதழில் உள்ள ரயில்வே ஊழியர்கள் ஊதியம் மாதம் 7000 க்கு மேல் இருந்தால், அவர்களுக்கு இணைக்கப்பட்ட போனஸ் ‘ஊதியம்’ 7000 என கணக்கிடப்படும்.