திண்டுக்கல் மாவட்ட பகுதியில் பாரதி புரத்தில் 12 வயது சிறுமி தனது தந்தையுடன் வசித்து வந்துள்ளார். திடீரென்று உடல்நலம் பாதிக்கப்பட்டதால் பெற்றோர்கள் சிறுமியை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மருத்துவர்கள் பரிசோதனை செய்ததில் சிறுமி கர்ப்பமாக இருந்துள்ளார். இதையடுத்து மருத்துவர்கள் போலீசுக்கு தகவல் தெரிவித்த நிலையில் மகளிர் போலீசார் சிறுமியிடம் விசாரணை நடத்தி வருகின்றனர். அதில், தந்தைக்கும், தாய்க்கும் ஏற்கனவே ஏற்பட்ட கருத்து வேறுபாடு இருந்த நிலையில் பிரிந்து வாழ்ந்து வருகின்றனர்.
இந்தச் சூழலை பயன்படுத்திக் கொண்ட தந்தை மற்றும் அவரது நண்பரான கண்ணனும் சிறுமியை பலமுறை பாலியல் வன்கொடுமை செய்தனர் . மேலும் இதனை அரிசி கடை உரிமையாளரான முகமது ரபிக் என்பவர் பார்த்துள்ளார்.
அதனை வைத்து அவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார் என்பது தெரியவந்துள்ளது. இதையடுத்து போலிஸ் பெண்ணின் வாக்குமூலத்தை வைத்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி, மூவரையும் குண்டர் சட்டத்தின் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர்.