“கொரியர் வந்திருக்கு, இங்க வாங்க…” நம்பிப்போன பேஷன் டிசைனருக்கு கத்தி குத்து கோவையில் அதிர்ச்சி!

கோயம்புத்தூர் பகுதியில் கொரியர் கொடுப்பது போல் நடித்து பெண்ணை கத்தியால் குத்திய சம்பவம் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. கோவை புதூர் தில்லை நகரில் வசித்து வருபவர் மோதிலால் சாப்புடு இன்ஜினியராக பணியாற்றி வருகிறார். இவரது மனைவியின் பெயர் சங்கீதா அவர் பேஷன் டிசைனராக இருக்கிறார். இந்நிலையில் சங்கீதாவை செல்போன் மூலம் தொடர்பு கொண்ட ஒரு நபர் அவருக்கு கொரியர் வந்திருப்பதாக கூறினார். மேலும் சங்கீதா இருக்கு பகுதியில் நாய்களின் தொல்லை அதிகமாகயிருப்பதால் அந்த தெருவின் கார்னரில் வந்து வாங்கி செல்லும்படி கூறியிருக்கிறார். அந்த இளைஞரின் பிச்சை நம்பி சங்கீதா கொரியர் வாங்க சென்ற போது அந்த நபர் எதிர்பாராத விதமாக மறைத்து வைத்திருந்த கத்தி எடுத்து சங்கீதாவின் தோல் பகுதியில் குத்தி விட்டு தப்பி சென்று விட்டார். இதனால் இரத்த வெள்ளத்தில் காயம் பட்டு கிடந்த சங்கீதாவை அக்கம் பக்கத்தினர் மீட்டிங் ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

இந்த சம்பவத்தில் முதலில் நகை கொள்ளைக்காக இந்த சம்பவம் நடந்ததாக கூறப்பட்டது. ஆனால் காவல்துறை விசாரணையில் அந்த நபர் சங்கீதாவை தாக்கும் நோக்கத்துடனே திட்டமிட்டு வந்துள்ளது தெரிய வந்திருக்கிறது. முக கவசம் மற்றும் கையுற இடம் வந்துள்ள அந்த நபர் சங்கீதாவை தொடர்பு கொள்வதற்கும் அப்பகுதியில் உள்ள வாட்ச்மேன் ஒருவரின் செல்போனையே பயன்படுத்தி இருப்பது காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளது. இதனால் எதற்காக அந்த நபர் சங்கீதாவை வேண்டுமென்றே தாக்க வந்தார் என்ற கோணத்தில் காவல்துறை விசாரித்து வருகிறது.

Baskar

Next Post

10 வது மாடியில் இருந்து பாய்ந்து தற்கொலை.. மருத்துவக் கல்லூரி மாணவியின் உருக்கமான கடிதம்!

Wed Feb 15 , 2023
சென்னை கோடம்பாக்கம் பகுதியில் மருத்துவக் கல்லூரி மாணவி ஒருவர் தான் வாழும் அடுக்குமாடி வீட்டின் பத்தாவது மாடியில் இருந்து குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் அப்பகுதியில் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது. சென்னை கோடம்பாக்கம் அம்பேத்கர் சாலையில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் ராமசுப்பு. இவர் தெற்கு ரயில்வேயில் அதிகாரியாக பணியாற்றி ஓய்வு பெற்றவர். தற்போது மெட்ரோ ரயில் நிர்வாகத்தில் அதிகாரியாக பணியாற்றி வருகிறார். இவரது இளைய […]

You May Like