பெரும்பாலான நாடுகளில் முறைப்படி விவாகரத்து பெற்ற பின்னர் தான் வேறு நபரை திருமணம் செய்ய முடியும். இருப்பினும் பழங்குடி தொல் கலாசாரத்தை பின்பற்றும் நாடுகளில் பலதார மணம் சட்ட விரோதம் இல்லை. அந்த வகையில், கென்யாவில் ஒரு இளைஞர், 3 பெண்களை ஒரே நேரத்தில் திருமணம் செய்து ஒற்றுமையாக வாழ்ந்து வருகிறார். இவர்கள் மூவரும் ஒரே போன்ற தோற்றம் கொண்ட சகோதரிகள். கென்யாவைச் சேர்ந்த ஸ்டீவோ என்ற இளைஞர், முதன் முதலில் கேத் என்ற பெண்ணை சந்தித்து பழகியுள்ளார். அப்போது கேத், தனக்கு ஈவ், மேரி என்று இரு சகோதரிகள் உள்ளதாக தெரிவித்துள்ளார்.
இந்த 3 சகோதரிகளும் கோஸ்பல் இசைத்துறையில் பயிற்சி பெற்று இசை கலைஞர்களாக உள்ளனர். முதலில் கேத்திடம் பழகிய அந்த இளைஞர், பின்னர் அவரின் இரு சகோதரிகளிடமும் பேசி பழகியுள்ளார். அப்போது தான் திருமணம் செய்தால் 3 பேரையும் திருமணம் செய்து கொள்ள வேண்டும் என அந்த இளைஞருக்கு தோன்றியுள்ளது. இறைவன் தன்னை ஒரு பெண்ணுக்காக மட்டும் படைக்கவில்லை என்பதை உணர்ந்ததாக ஸ்டீவோ கூறுகிறார். இதனைத் தொடர்ந்து 3 பெண்களையும் திருமணம் செய்த ஸ்டீவோ, தனக்கு 3 பெண்கள் போதும் என்ற திருப்தியோடு வாழ்வதாக தெரிவிக்கிறார். 3 பேரையும் திருப்தி செய்ய முடிகிறதா என்ற கேள்வி தன்னிடம் பல முறை முன்வைக்கப்படுவதாகக் கூறும் ஸ்டீவோ, மக்களுக்கு இதிலென்ன சந்தேகம் அது ஒன்றும் பெரிய காரியம் இல்லை என்கிறார்.
திங்கட்கிழமை மேரிக்கும், செவ்வாய்க்கிழமை கேத்துக்கும், புதன்கிழமை ஈவ்விற்கும் ஒதுக்கி ஒவ்வொரு மனைவிக்கும் அட்டவணைப் போட்டு வாழ்க்கை நடத்துகிறார். ஸ்டீவை திருமணம் செய்த 3 சகோதரிகளும் இனி வேறு ஒரு பெண்ணை எங்களுக்கு குடும்பத்தில் சேர்க்க திட்டமில்லை, நாங்கள் 3 பேருமே அவனுக்கு போதும் என கறாரக முடிவெடுத்து ‘நோ என்ட்ரி’ தடை போட்டு வைத்துள்ளனர்.