’உரிமையாளருக்கு தெரியாமலேயே ஆதார் இணைப்பு’..!! மின்சார வாரியம் அதிரடி உத்தரவு..!!

மின் இணைப்புடன் ஆதார் எண்ணை இணைப்பதில் ஏற்பட்ட குளறுபடியால் புதிய உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

மின் இணைப்புடன், ஆதார் எண்களை இணைக்க வேண்டும் என அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து அதில் நிறைய குளறுபடிகள் நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து மின்வாரியம் புதிய உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதாவது, வீட்டின் உரிமையாளர், குத்தகைதாரர் மற்றும் இணை உரிமையாளர்களுக்கு தெரியமாலே ஆதார் எண்கள் இணைக்கப்பட்டுள்ளது தெரியவந்துள்ளது.

ஆதார் எண் இணைப்பு முழுவீச்சில் நடைபெறுவதாக காட்டுவதற்கு அதிக அளவில் சம்பந்தமில்லாத ஆதார் எண்களை இணைத்துள்ளதாக கூறப்படுகிறது. சம்பந்தப்பட்ட நபர்களின் ஆதார் எண் மட்டுமே மின் இணைப்புடன் இணைக்கப்பட வேண்டும். இதனை நீங்கள் தான் உறுதி செய்ய வேண்டும் என அதிகாரிகளுக்கு மின்சார வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது போன்ற செயல்களால் அரசின் திட்டத்தின் நோக்கமே வீணாகியுள்ளது என மின் வாரியம் கண்டனம் தெரிவித்துள்ளது. உயரதிகாரிகள் இதற்கு தனி கவனம் செலுத்தி, உரிய தகவல்களை தெரிவிக்க மின்வாரியம் உத்தரவிட்டுள்ளது.

Chella

Next Post

மிகப்பெரிய மோசடி.. மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வந்தால் நம்பாதீங்க.. மின்வாரியம் எச்சரிக்கை..

Mon Feb 6 , 2023
மின் கட்டணம் செலுத்தவில்லை என்று மெசேஜ் வந்தால் நம்ப வேண்டாம் என்று மின் வாரியம் எச்சரித்துள்ளது. இந்தியாவில் சைபர் கிரைம் சம்பவங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. பல்வேறு நூதுன வழிகளில் சைபர் குற்றவாளிகள் மோசடி செய்து பணத்தை திருடி வருகின்றனர்.. அந்த வகையில் தற்போது மற்றொரு மோசடி அரங்கேறி வருகிறது.. மின்சாரக் கட்டணம் நிலுவையில் இருப்பது தொடர்பாக வாட்ஸ் அப் மற்றும் எஸ்.எம்.எஸ் மூலம் ஒரு செய்தி […]

You May Like