அரசியலில் தன் பேச்சுகளால் களமாடும் கிஷோர் கே சாமி அவர்களுக்கு அவதூறு நோட்டிஸ் அனுப்புவதற்கு பதிலாக வேறு ஒருவரின் முகவரிக்கு மாற்றி அனுப்பியதால் கலைஞர் தொலைக்காட்சியை தன் முகநூல் பக்கத்தில் வறுத்தெடுத்துள்ளார் கிஷோர் கே சாமி.

இது குறித்து கிஷோர் கே சாமி முகநூல் பக்கத்தில் பதிவிட்டிருப்பதாவது, “கலைஞர் tv செய்த கூத்து: ‘மானாட மார்பாட’ புகழ் கலைஞர் டிவி குறித்து ஊருக்கே தெரியாத அவதூறை நான் பரப்பி விட்டதாகவும் அதற்காக இல்லாத மானத்திற்கு நஷ்டஈடு கேட்டு 1கோடி ரூபாய் வேண்டுமென்று நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.ஆனால் அதில்தான் ஒரு twist, தங்கள் தலைவரைப் போல ஆக சிறந்த தத்திகளைக் கொண்ட கலைஞர் tv நோட்டீஸை எனக்கு அனுப்புவதற்கு பதிலாக kk swamy என்கிற பெயரில் மைலாப்பூரில் கடை வைத்திருக்கும் ஐயர் மாமா வீட்டிற்கு அனுப்பித் தொலைத்தனர். திகிலான அப்பாவி மாமா அவருடைய வக்கீலை நாட வக்கீலுக்கு என்னைத் தெரிந்திருந்த காரணத்தினால் வக்கீல் என்னை நாட, மானாட மயிலாடி விட்டது.
அட கடைந்தெடுத்த தத்திகளா…அந்த டுபாக்கூர் நோட்டீஸையாவது ஒழுங்கா அனுப்பி தொலைங்கடா. இல்லனா ஏற்கனவே உங்களுக்கு 40% சம்பளத்தை கொறச்சவனுங்க மொத்தத்தையும் ஆப்பு அடிப்பாங்க.. இந்த டுபாக்கூர் நோட்டீஸை தயாரித்தவர் ராஜ்ய சபா MP வில்சனாம்…
(பிகு: கீழே correct address உள்ளது உங்களுக்குப் புரியும் வகையில் துண்டு சீட்டில் எழுதியுள்ளேன்)” என்று கூறி தனது முகவரியையும் போட்டோ எடுத்துப் போட்டுள்ளார்.
