எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி கைது..!! பரபரப்பு

தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகளை காவல்துறையினர் கைது செய்தனர்.


தமிழக சட்டப்பேரவையில் அதிமுக எதிர்க்கட்சி துணைத்தலைவர் இருக்கை ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஒதுக்கப்பட்டது. சபாநாயகரின் இந்த நடவடிக்கைக்கு எதிர்ப்பு தெரிவித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்எல்ஏ-க்கள் இன்று உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டனர். சென்னை வள்ளுவர்கோட்டத்தில் இன்று காலை போராட்டம் தொடங்கியது. ஆனால், இந்த போராட்டத்திற்கு போலீசார் அனுமதி வழங்கவில்லை. ஆனாலும், தடையை மீறி எடப்பாடி பழனிசாமி தலைமையில் அதிமுக எம்.எல்.ஏ.க்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

எடப்பாடி பழனிசாமி உள்ளிட்ட அதிமுக நிர்வாகிகள் அதிரடி கைது..!! பரபரப்பு

இந்நிலையில், தடையை மீறி போராட்டம் நடத்தியதாக எடப்பாடி பழனிசாமி மற்றும் அதிமுக எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள், கட்சி தொண்டர்களை காவல்துறையினர் கைது செய்தனர். கைது நடவடிக்கையை கண்டித்து வள்ளுவர்கோட்டத்தில் அதிமுகவினர் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதால் பரபரப்பான சூழ்நிலை காணப்படுகிறது.

CHELLA

Next Post

திடீரென கைது செய்யப்பட்ட எடப்பாடி பழனிசாமி.!

Wed Oct 19 , 2022
சென்னை வள்ளுவர் கோட்டத்தில் அனுமதி பெறாமல் போராட்டம் நடத்திய எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் அதிமுக எம்எல்ஏ., க்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். தமிழக சட்டசபை இரண்டாவது நாளாக நேற்று கூடியது. பேரவைத் தலைவர் வினாக்கள் விடைகளுக்கான நேரத்தை தொடங்கினார். அப்போது, இ.பி.எஸ். தரப்பு ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் எதிர்க்கட்சி துணைத் தலைவர் இருக்கையை ஆர்.பி.உதயகுமாருக்கு அங்கீகரிக்க கோரி முழக்கங்களை எழுப்பினர். இதனால், சட்டசபையில் எடப்பாடி பழனிசாமி ஆதரவு சட்டமன்ற உறுப்பினர்கள் […]
Edappadi Palanisamy 3

You May Like