ஆன்லைன் வங்கி சேவையை பயன்படுத்தும் வாடிக்கையாளர்கள், இணைய வங்கி தொடர்பான பரிவர்த்தனைகள்/செயல்பாடுகளுக்கு OTP-ஐ உருவாக்க Secure OTP என்ற புதிய செயலியை பாரத ஸ்டேட் வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது.
இந்தியாவின் மிகப்பெரிய வங்கியாக பாரத ஸ்டேட் வங்கி விளங்கிவருகிறது. இந்நிலையில், தனது வாடிக்கையாளர்களுக்கு புதிய செயலி ஒன்றை எஸ்பிஐ வங்கி அறிமுகப்படுத்தியுள்ளது. அதில், வாடிக்கையாளர்கள் இனி இன்டர்நெட் பேங்கிங், ஆன்லைன் சேவைகளை பயன்படுத்த எஸ்எம்எஸ் மூலம் OTP பெறாமல், தனி செயலி மூலம் அதனை பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்த செயலி Android மற்றும் iOS பயனர்களுக்கு கிடைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது.
SBI Secure OTP செயலியை பயன்படுத்தும் முறை பின்வருமாறு: Online SBI-இல் உள்நுழைந்து, சுயவிவரப் பகுதிக்குச் சென்று, பாதுகாப்பான OTP இணைப்பைச் செயல்படுத்தவும். இதையடுத்து, பெறப்பட்ட ஆக்டிவேஷன் கோடை உள்ளிடவும். சரிபார்த்த பிறகு, Secure OTP செயலி பயனர் பதிவு நிறைவு செய்யப்படும். மேலும், இன்டர்நெட் பேங்கிங்/YONO LITE ஆப்பிற்கான OTP அங்கீகார முறையானது, SBI Secure OTP செயலிக்கு மாற்றப்படும் என்பதை நினைவில் கொள்ளவும். இதன்மூலம், இனி வாடிக்கையாளர் எஸ்எம்எஸ் மூலம் OTP பெறமாட்டார்.
மேலும், MPIN-ஐ பயன்படுத்தி SBI Secure OTP செயலியில் உள்நுழைந்து, வாடிக்கையாளர்களை பதிவு செய்யும்போது பயன்படுத்திய பாதுகாப்பான OTP-ஐ உருவாக்க அதே சிம் இடத்தில் இருப்பதை உறுதி செய்யுமாறு அறிவுறுத்தியுள்ளது. மொபைலில் உள்ள செயலியில் பதிவு செய்தவுடன், OTP-ஐ உருவாக்க அதே மொபைலை பயன்படுத்த வேண்டும் என்றும் இதற்கிடையில், நீங்கள் வேறொரு மொபைலில் இருந்து பதிவு செய்ய விரும்பினால், அதே சிம்மை புதிய கைபேசியில் இணைக்கவும்.