அரியலூர் : காட்டுக்கு காளான் பறிக்கச் சென்ற பெண்களை வெட்டிக்கொன்ற கொடூரம்.!

அரியலூர் மாவட்டம், பெரியவளையம் கிராமத்தை சேர்ந்த கலைமணி என்பரது மனைவி மலர்விழி (வயது 29). இவர்
நேற்று முன்தினம் காலை அதே பகுதியைச் சேர்ந்த தண்டபாணி மனைவி கண்ணகி(40), மலர்விழி இவரும் சமையல் செய்வதற்காக, அருகில் உள்ள வயலுக்கு காளான் பறிப்பதற்காக சென்றுள்ளனர்.

இருவரும் சைக்கிளில் சென்ற நிலையில், வெகு நேரமாகியும் மலர்விழி மற்றும் கண்ணகி வீடு திரும்பாததால் கலைமணி மற்றும் அப்பகுதி இளைஞர்கள் வயலுக்கு சென்று பார்த்துள்ளனர். அப்போது அந்த நடந்திருந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மலர்விழியும், கண்ணகியும் வெட்டிக்கொலை செய்யப்பட்டு கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். இதனை தொடர்ந்து கலைமணி அளித்த புகாரின்பேரில் ஜெயங்கொண்டம் போலீசார் சம்பவ இடத்திற்கு சென்றுள்ளனர். மலர்விழி, கண்ணகி ஆகியோரின் உடல்களை ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனைக்கு, பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர் .

கொலைக்கான காரணம் என்ன? என்பது பற்றி பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்ற நிலையில் கழுத்தில் அணிந்திருந்த நகைகள் கொள்ளையடிக்கப்பட்டிருந்ததால், நகைக்காக இந்த கொலை நடந்திருக்கலாம், என்று போலீசார் சந்தேகிக்கின்றனர்.

உடல்கள் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு நேற்று மலர்விழி, கண்ணகி ஆகியோரின், உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது . மேலும் போலீசார் நடத்திய விசாரணையில், கண்ணகியின் செல்போனை காணவில்லை என்பதும், அவரது செல்போன் ‘சுவிட்ச் ஆப்’ செய்யப்பட்டிருந்ததும் தெரியவந்திருக்கிறது .

இதனை தொடர்ந்து கண்ணகியின் செல்போன் மூலம் தொடர்பு செய்யப்பட்ட நம்பர்களை கொண்டு போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். அவர் யார், யாருடன் பேசினார் என்பது பற்றிய விசாரணையை முதல் கட்டமாக தொடங்கியுள்ளனர்.

Baskar

Next Post

உஷார்.. குறைவான முதலீடு அதிக லாபம்.. ஆசைக்காட்டி ஏமாற்றிய ரியல் எஸ்டேட் ப்ராடு.!

Tue Oct 25 , 2022
புதுச்சேரி மாநிலம் கோரிமேட்டை சேர்ந்தவர் லூர்து பெலிக்ஸ் (வயது 38). இவருக்கு சங்கரன்பேட்டை காமன்கோவில் தெருவை சேர்ந்த ராஜேந்திரன் மகன் ராஜசேகர் (31) என்பவர் பதிதாக அறிமுகம் ஆகினார். ராஜசேகர் ரியல் எஸ்டேட் தொழில் செய்து வருவதாகவும் , அதனால் பணம் கொடுத்தால் கூடுதல் பணம் தருவதாகவும் நம்பிக்கை வார்த்தைகளை கூறியுள்ளார். இதனை முழுவதுமாக உண்மை என்று நம்பிய லூர்துபெலிக்ஸ் தன்னிடம் இருந்த பணம் மற்றும் தனக்கு தெரிந்தவர்களிடம் இருந்து […]

You May Like