செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க உள்ளதாக இன்ஸ்டாவில் அர்னாவ் போட்ட போஸ்ட் பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது.
சன் டிவி, விஜய் டிவி சீரியல்களில் நடித்து புகழமைந்தவர் நடிகர் அர்னாவ். செல்லம்மா சீரியலில் சித்து என்ற கதாபாத்திரத்தில் அவர் நடித்து வருகின்றார்.அன்ஷிதா என்பவர் ஜோடியாக நடிக்கின்றார். இருவரும் நெருங்கி பழகி வருவமாக சர்ச்சை எழுந்த நிலையில் அவர் பேச்சை கேட்டு தன்னை அடித்ததாக திவ்யா ஸ்ரீதர் போலீசில் புகார்அளித்தார்.
இதையடுத்து இவர்களின் விவகாரம் சூடு பிடித்தது. தற்போது செவ்வந்தி சிரியலில் நடித்து வரும் திவ்யா அர்னாவை 2வதாக திருமணம் செய்து கொண்டார். 6 வயதில் மகன் உள்ள நிலையில் அர்னாவும் – திவ்யாவும் ஒரே சீரியலில் நடித்ததன் மூலம் இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். இதை அதுவரை வெளியில் சொல்லாமல் இருந்த திவ்யா, அர்னவ்- அன்ஷிதாவுடன் நெருக்கமாக பழகியதால் சண்டை வெடித்துள்ளது.
இதனால் போலீஸ் நிலையத்தில் புகார்அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டது. இதன்பேரில் அர்னவ் கைது செய்யப்பட்டார். அவருக்கு ஜாமீன் கிடைக்காது என்று பேசப்பட்டது. இந்நிலையில் செல்லம்மா சீரியலில் வேறொருவர் அந்த இடத்திற்கு வருவார் என கூறப்பட்டது. ஆனால் அர்னாவ் நிபந்தனை ஜாமீன் பெற்றார். நேற்று மீண்டும் செல்லம்மா சீரியலில் அவர் தோன்றினார். சித்து லுக்கில் உள்ள ஒரு போட்டோவை இன்ஸ்டாவில் பகிர்ந்துள்ளார். இதன் மூலம் அவர் மீண்டும் சின்னத்திரைக்கு வந்திருப்பதை உறுதி செய்துள்ளார்.