அரியலூரில்பரபரப்பு: ஒதுங்க சென்ற மாணவி! ஒளிந்து வந்த இளைஞர்! போக்சோவில் கைது!

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ் அப்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். பின்னர் சிறுமியிடம் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் என்று இருக்கிறார். இவரது நடவடிக்கைகளை உணர்ந்து கொண்டு சிறுமி இவரிடமிருந்து விலகிச் சென்று அவரை தள்ளிவிட்டு ஊருக்குள் ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.

இந்த வழக்கை விசாரித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்யு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் கழிப்பறை இருக்காது அதனால் ஆறு மற்றும் குளங்களுக்கு அருகில் உள்ள அலறவம் இல்லாத இடங்களில் தான் இயற்கை உபாதைகளுக்காக ஆண்களும் பெண்களும் செல்வார்கள். இதுபோன்று சென்ற சிறுமியை தான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார் செல்வராஜ். இது அப்பகுதியில் இருக்கும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.

Baskar

Next Post

இளைஞரின் உயிரை பறித்த பள்ளி காதல்! சென்னை புழலில் சிக்கிய 4 குற்றவாளிகள்!

Tue Feb 14 , 2023
சென்னை புழல் அருகே பைக்கில் சென்ற இளைஞரை வழிமறித்து கொலை செய்த கும்பலை காவல்துறை நீண்ட தேடுதல் வேட்டைக்குப் பின் கைது செய்து இருக்கிறது. மேலும் இந்த விசாரணையில் பல திடுக்கிட்டு உண்மை சம்பவங்கள் வெளியாகி அதிர்ச்சி அளிக்கின்றனர். சென்னை புழல் அசோகர் தெருவை சார்ந்தவர் சுதா சந்தர். இவர் கடந்த மாதம் 31ஆம் தேதி ரெட்டை ஏரி கல்பாளையம் அருகே ஒரு பெண்ணுடன் மோட்டார் சைக்கிளில் வந்து கொண்டிருந்தபோது […]

You May Like