அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே இயற்கை உபாதைகள் கழிக்க சென்ற சிறுமியை பாலியல் பலாத்காரம் செய்யும் என்ற இளைஞரை போலீசார் கைது செய்துள்ளனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே உள்ள தேவனூர் கல்வெட்டு கிராமத்தைச் சார்ந்தவர் செல்வராஜ். அந்தப் பகுதியில் உள்ள சிறுமி ஒருவர் இயற்கைபாதைகளை கழிப்பதற்காக ஆள் அரவமில்லாத ஒதுக்கு புறமான இடத்திற்கு சென்றுள்ளார். இதனை கவனித்துக் கொண்டிருந்த செல்வராஜ் அப்பெண்ணிற்கு தெரியாமல் அவரை பின்தொடர்ந்து இருக்கிறார். பின்னர் சிறுமியிடம் சென்று அவரை பாலியல் பலாத்காரம் செய்யும் என்று இருக்கிறார். இவரது நடவடிக்கைகளை உணர்ந்து கொண்டு சிறுமி இவரிடமிருந்து விலகிச் சென்று அவரை தள்ளிவிட்டு ஊருக்குள் ஓடி வந்து தனது பெற்றோரிடம் நடந்ததை தெரிவித்திருக்கிறார். இதனைக் கேட்டு அதிர்ச்சி அடைந்த அவரது பெற்றோர் அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்தனர்.
இந்த வழக்கை விசாரித்து அரியலூர் அனைத்து மகளிர் காவல் நிலையம் இது தொடர்பாக குற்றம் சாட்டப்பட்ட செல்வராஜை கைது செய்து அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிவு செய்தது. இயற்கை உபாதைகளை கழிப்பதற்காக சென்ற பெண்ணை இளைஞர் ஒருவர் பின் தொடர்ந்து சென்று பாலியல் பலாத்காரம் செய்யு முயன்ற சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை அச்சத்தையும் ஏற்படுத்தி இருக்கிறது. கிராமப்புறங்களில் பெரும்பாலும் வீடுகளில் கழிப்பறை இருக்காது அதனால் ஆறு மற்றும் குளங்களுக்கு அருகில் உள்ள அலறவம் இல்லாத இடங்களில் தான் இயற்கை உபாதைகளுக்காக ஆண்களும் பெண்களும் செல்வார்கள். இதுபோன்று சென்ற சிறுமியை தான் பாலியல் பலாத்காரம் செய்ய முயன்றிருக்கிறார் செல்வராஜ். இது அப்பகுதியில் இருக்கும் பெண் பிள்ளைகளை பெற்ற பெற்றோர்களை அதிர்ச்சியடைய செய்திருக்கிறது.