ஏ.டி.எம். மையங்கள் மூலம் மாதம் இவ்வளவு சம்பாதிக்கலாமா?

ஏ.டி.எம். மையங்களை அமைக்க அனுமதி வழங்கப்படுவதன் மூலம் ரூ.60,000 வரை சம்பாதிக்க முடியும் என்றால் உங்களால் நம்பமுடிகின்றதா ? மேலும் தகவல்களை இந்த பதிவில் பார்க்கலாம்.

பொதுவாக ஏ.டி.எம். மையங்களை வங்கிகளின் ஒப்பந்ததார நிறுவனங்கள் அமைக்கின்றன. அத்தகைய நிறுவனங்கள் பல இடங்களில் ஏ.டி.எம்.களை நிறுவுகின்றன. அந்த நிறுவனங்கள் மட்டும்தான் ஒரு குறிப்பிட்ட இடத்தில் ஏ.டி.எம். இயந்திரத்தை நிறுவ வேண்டுமா ஏன் தனி நபரால் அதை நிறுவ முடியாதா? என கேட்டால் ஆம் ஒரு தனி நபரால் அதை செய்ய முடியும்.

ஏ.டி.எம். ஒப்பந்ததாரராக இருக்க குறைந்த பட்சம் ரூ.5 லட்சம் திரும்பப்பெறும் முதலீட்டில் மாதம் ரூ60 ஆயிரம் முதல் ரூ.70 ஆயிரம் வரை சம்பாதிக்கலாம். இந்தியாவின் மிகப்பெரிய பொதுத்துறை வங்கியான பாரத ஸ்டேட் வங்கி இந்தியாவில் ஏடிஎம்களை நிறுவ டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம், இந்தியா ஒன் ஏ.டி.எம். ஆகியவற்றுடன் ஒப்பந்தம் செய்துள்ளது.

ஏ.டி.எம். மையத்தை அமைக்கும் உரிமைக்கு விண்ணப்பிக்க விரும்பினால் இதற்கென அதிகாரப்பூர்வமான இணையதளங்கள் உள்ளன. ஏ.டி.எம். கேபினை அமைக்க 50 முதல் 80 சதுர அடி பரப்பளவில் உங்களிடம் இருந்தால் போதும். மற்ற ஏ.டி.எம்.களில் இருந்து தூரத்தை கணக்கிடும் போது 100 மீட்டர் தொலைவில் இருக்க வேண்டும். அந்த பகுதியில் தடையின்றி மின்சாரம் விநியோகிக்கப்பட வேண்டும்.

எனவே ஏ.டி.எம். மையம் நிறுவுவதற்கு 1kW  மின்சார இணைப்பு தேவை. ஏ.டி.எம். கேபின் கான்கிரீட் கூரை மற்றும் செங்கல் சுவர்கள் கொண்ட நிரந்தர கட்டிடமாக இருக்க வேண்டும். நீங்கள் ஒரு சமூகத்தில் வசிப்பதானால், V-SAT ஐ நிறுவுவதற்கு, நீங்கள் சங்கம் அல்லது அதிகாரிகளிடமிருந்து தடையில்லாச் சான்றிதழைப் பெற வேண்டியது அவசியம்.

எஸ்.பி.ஐ. ஏ-டி.எம். உரிமைக்கு விண்ணப்பித்து ஒப்புதல் பெறும் போது செக்யூரிட்டி டெபாசிட்டாக ரூ.2 லட்சம் தர வேண்டம். இது நிறுவனத்திற்கு நிறுவனம் மாறுபடுகின்றது. ஒட்டு மொத்த முதலீடு ரூ.5 லட்சம் வரை ஆகும். ஏ.டி.எம். கேபின்கட்டப்பட்டு மக்கள் அதனை பயன்படுத்த தொடங்கிய பின்னர் உங்களுககு பண பரிவர்த்தனை ரூ.8 மற்றும் பேலன்ஸ் சரிபார்ப்பு பணமில்லா பரிவர்த்தனைக்கு ரூ.2 கிடைக்கும்.

எஸ்பிஐ ஏடிஎம் உரிமைக்கு விண்ணப்பிக்க தேவையான ஆவணங்கள் :1) ஆதார் அட்டை, வாக்காளர் அட்டை அல்லது பான் கார்டு போன்ற ஏதேனும் அடையாளச் சான்று.

2) ரேஷன் கார்டு அல்லது மின்சார பில் போன்ற முகவரி சான்று.

3) வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக் விவரங்கள்.

4) சமீபத்திய புகைப்படம், சரியான மின்னஞ்சல் ஐடி அல்லது தொடர்பு எண்.

5) ஜிஎஸ்டி எண். 

Next Post

தமிழகமே...! வரும் 9-ம் தேதி புதிய காற்றழுத்த தாழ்வுப்பகுதி...! வெளுத்து வாங்க போகும் கனமழை...!

Mon Nov 7 , 2022
இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்ட செய்தி‌ குறிப்பில், ‘இலங்கை கடற்கரையை ஒட்டியுள்ள தென்மேற்கு வங்கக்கடல் பகுதியில் வரும் 9-ம் தேதி வாக்கில் ஒரு காற்றழுத்த தாழ்வுப்பகுதி உருவாகக்கூடும். இது அடுத்த 48 மணி நேரத்தில் வடமேற்குத்திசையில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி கடற்கரையை நோக்கி நகரக்கூடும். குமரிக்கடல் […]

You May Like