நாட்டின் தலைசிறந்த கடன் வழங்குபவர்களிடம் இருந்து பல்வேறு கல்விக் கடன்கள் வெவ்வேறு படிப்புகளுக்கு வழங்கப்படுகிறது. நீங்கள் எந்த வகையான கல்வி கடனை எடுக்க முடிவு செய்தாலும் அதை திருப்பி செலுத்தும் திறனை பெற்றிருக்க வேண்டியது அவசியமாகும். பஞ்சாப் நேஷனல் வங்கி மாணவர்களுக்குரிய கல்விக்கடனை பொறுத்தவரை அதிகபட்ச காலம் 15 வருடங்கள் பிணையமாகவும், ரூ.7.5 லட்சத்தில் NIL ஆகவும் இருக்கும். அதே நேரம் ரூ.7.5 லட்சம் வரையிலும் பாதுகாப்பு கடன் தேவையில்லை.
பாரத ஸ்டேட் வங்கி (SBI) கல்விக்கடன் திட்டங்கள் பல வடிவங்களில் வருகிறது. ரூ. 7.5 லட்சம் இணை (அ) 3ஆம் தரப்பு உத்தரவாதம் தேவையில்லை. படிப்பு முடிந்து ஒரு ஆண்டுக்கு பின் திருப்பிச் செலுத்த வேண்டும். படிப்பு முடிந்து 15 வருடங்கள் வரையிலும் திருப்பிச் செலுத்துதல் மற்றும் 12 மாதங்கள் வரையிலான கடனுக்கான செயலாக்க செலவுகள் தள்ளுபடி செய்யப்படும். ரூ.20 லட்சம் வரை கடன் வழங்கப்படும் மற்றும் இதன் வட்டிவிகிதம் 8.30 சதவீதம் ஆகும்.