திருவேற்காடில் கருமாரியம்மன் பகுதியில் வாழ்ந்து வருபவர் உதயகுமார். இவருக்கு உமா என்ற மனைவியும், ஸ்ரீநிதி என்ற 19 வயது மகளும் உள்ளனர். மேலும், இப்பெண் 2ம் ஆண்டு தனியார் கல்லூரியில் சென்னையில் படித்து வந்தார். இவரின் தந்தை தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வந்துள்ளார்.
உமா வழக்கம் போல் இன்று காலையில் எழுந்த போது தனது மகள் ஸ்ரீநிதி வீட்டில் அடுத்து ஒரு அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்துள்ளார். இதனை பார்த்து மனம் கலங்கி கதறி அழுதுள்ளார். அவரின் அலரலை கேட்டு பக்கத்தில் உள்ளவர்கள் வந்து பார்த்து, விரைவாக திருவேற்காடில் இருக்கும் காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளனர்.
ஸ்ரீநிதியின் செல்போனை மீட்ட போலீசார், அதனை ஆய்வு செய்து மாணவியின் பெற்றோரிடம் தொடர்ந்து விசாரணை நடத்திய போது, மகளின் மரணம் குறித்து பெற்றோர், ”இதற்கு முன்னர் நாங்கள் சிவசங்கர் என்ற நகரில் வசித்து வந்தோம். அந்த வீட்டு உரிமையாளர் ரேவதி என்பவரிடம் 2 பவுன் மதிப்புள்ள நகையை குடும்ப பிரச்சனையின் காரணமாக வாங்கி அடகு வைத்து இருந்தோம். பிறகு சில தவிர்க்க முடியாத காரணத்தினால் வீட்டை காலி செய்து விட்டு மற்றொரு இடத்தில் குடிபெயர்ந்தோம்.
சில நாட்களுக்கு முன்பு ரேவதியின் கணவர் வினோத் தங்களது வீட்டிற்கு வந்து , அவரின் மனைவியிடம் 2 பவுனுக்கு பதிலாக 7 பவுன் வாங்கியதாக கூறி கலவரத்தை ஏற்படுத்தினார். அதன்விளைவாக எங்கள் மீது அவர் காவல் நிலையத்தில் புகார் அளித்துவிட்டார். அதனை விசாரிக்க போலீசார் எங்களை அழைத்து பேசினர். தற்கொலை செய்து கொள்வதற்கு முன்பு,அங்கிருந்த அதிகாரி ஒருவருடன் என் மகள் செல்போனில் நியாயத்தைப் பேசியிருக்கிறாள் .
பெற்றோரின் வாக்குமூலத்தைப் பெற்று அப்பெண்ணின் செல்போனை மீட்டு போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இச்சிக்கலின் காரணமாக ஸ்ரீநிதி மன உளைச்சலில் தற்கொலை செய்து கொண்டார்.” என தாய் கூறியுள்ளார். பரிதாபமாக உயிரிழந்த என் மகளின் சாவுக்கு காரணமானவர்கள் தண்டிக்கப்பட வேண்டும்” என்றும் தெரிவித்துள்ளார் . இதனையடுத்து அவரது புகாரின் பேரில் தொடர்ந்து விசாரித்து வருகின்றனர்.