தினமும் அன்றாட உணவில் சேர்த்துக் கொள்ளும் தக்காளியின் தோல், விதைகள் மற்றும் சதை ஆகியவற்றில் ஏராளமான ஆரோக்கிய நன்மைகள் இருக்கின்றன.தக்காளி விதைகளின் ஆரோக்கிய நன்மைகள் சிலவற்றை மருத்துவ பரிசோதனைகளில் தெரிய வந்ததுள்ளது.
ஐரோப்பிய ஒன்றிய சுகாதார நிபுணர்கள் அளித்த தகவலின்படி தக்காளி விதைகளில் வெளிப்புறத்தில் காணப்படும் இயற்கையான ஜெல் இரத்த ஓட்டத்தை மேம்படுத்துகிறது. மேலும் இரத்தக் கட்டிகளையும் கட்டுப்படுத்தி, நாளங்கள் வழியாக இரத்த ஓட்டத்தை அதிகரிக்க உதவுகிறது.
இதில் ஆஸ்பிரின் இருப்பதால் , இரத்த உறைவு அபாயத்தைக் குறைக்க உதவுகிறது. மேலும், வயிற்றில் இரத்தப்போக்கு மற்றும் புண்கள் என எந்த பக்க விளைவுகளையும் ஏற்படுத்தாது எனவும் ஆய்வில் தெரிய வந்துள்ளது.
தக்காளி விதைகளில் உள்ள ஜெல் மற்றும் விதைகளை எடுத்து கொண்ட மூன்று மணி நேரத்திற்குள் ஒரு நபரின் இரத்த ஓட்டத்தில் விரைவில் முன்னேற்றம் ஏற்படும் என்றும் தெரியவந்துள்ளது.
தக்காளி விதைகள் இருதய ஆரோக்கியத்தை மேம்படுத்துவதாகவும் கூறுகின்றனர். மேலும் உயர் இரத்த அழுத்தம் மற்றும் பிற இருதய பிரச்சனைகளால் பாதிக்கப்பட்டவர்கள் தினமும் ஆஸ்பிரின் எடுத்துக் கொண்டால் உடலுக்கு நல்லது எனவும் மருத்துவர்கள் கூறுகிறார்கள்.
மேலும், தக்காளி விதைகளில் நார்ச்சத்தும் உள்ளது. எனவே இது செரிமானத்திற்கு பெரிதும் உதவுகிறது.