#Breaking..!! தொடர் மழை..!! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!

தொடர் மழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தென்மேற்கு பருவமழை காலம் கடந்த 23ஆம் தேதியுடன் இந்திய பகுதிகளில் இருந்து விலகிவிட்டது என்று வானிலை ஆய்வு மையம் அறிவித்திருக்கிறது. இந்த பருவமழை காலத்தில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் இயல்பை விட 45 சதவீதத்திற்கும் அதிகமாக மழை பதிவாகி உள்ளது. நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த 24 மணி நேரத்தில் தமிழ்நாட்டில் வத்திராயிருப்பு பகுதியில் 4 செ.மீ., ஸ்ரீவில்லிபுத்தூரில்  3 செ.மீ., கடம்பூரில், ராஜபாளையத்தில் தலா 2 செ.மீ. மழையும் பெய்திருக்கிறது.

#Breaking..!! தொடர் மழை..!! தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் இன்று விடுமுறை..!!

வழக்கமாக தென்மேற்கு பருவமழையை விட வடகிழக்கு பருவமழை காலத்தில் தான் தமிழகம் அதிக மழையை பெறும். வடகிழக்கு பருவமழையை தமிழ்நாடு, புதுச்சேரி எதிர்பார்த்து இருக்கின்றன. இந்நிலையில், தூத்துக்குடி மாவட்டத்தில் இரவு முழுவதும் பெய்த கனமழை மற்றும் அதிகாலை முதலே வானம் மேகமூட்டத்துடன் காணப்படுவதால் பள்ளிகளுக்கு மட்டும் இன்று ஒரு நாள் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் உத்தரவிட்டுள்ளார்.  

Chella

Next Post

சிக்குவாரா நடிகை ஜெயலட்சுமி...? 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு...! காவல்துறை நடவடிக்கை...!

Thu Oct 27 , 2022
நடிகை ஜெயலட்சுமி மீது 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிர்வாகியும், பாடலாசிரியருமான சினேகன். இவர் சினேகம் பவுண்டேஷன் என்ற பெயரில் கடந்த 2015ஆம் ஆண்டு முதல் தொண்டு நிறுவனம் ஒன்றை நடத்தி வருகிறார். தனது தொண்டு நிறுவனத்தின் பெயரை பயன்படுத்தி பா.ஜ.க பிரமுகரும், சின்னத்திரை நடிகையுமான ஜெயலட்சுமி பணமோசடியில் ஈடுபடுவதாக குற்றஞ்சாட்டி இருந்தார். இதையடுத்து சமிபத்தில் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் […]

You May Like