fbpx

முடிந்தது 10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு..!! இன்று முதல் கோடை விடுமுறை ஆரம்பம்..!! கொண்டாட்டத்தில் மாணவர்கள்..!!

10ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில், இன்று முதல் கோடை விடுமுறை தொடங்கியதால், மாணவர்கள் குஷியில் உள்ளனர்.

தமிழக பள்​ளிக்​கல்வி பாடத்​திட்​டத்​தில் 10, 11, 12ஆம் வகுப்​பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு நடத்​தப்​பட்டு வரு​கிறது. அதன்​படி, நடப்​பாண்டில் 11, 12ஆம் வகுப்​புகளுக்கு மார்ச் 3ஆம் தேதி முதல் 27ஆம் தேதி வரை பொதுத்தேர்வு நடைபெற்றது. இதனைத் தொடர்ந்து, 10ஆம் வகுப்புக்கு மார்ச் 28ஆம் தேதி பொதுத்தேர்வு தொடங்கியது.

இந்த தேர்வை தமிழ்நாடு முழுவதும் அமைக்​கப்​பட்​டுள்ள 4,113 மையங்​களில் சுமார் 9 லட்​சம் மாணவ, மாணவி​கள் எழுதுகின்​றனர். அதன்​படி தமிழ், கணிதம், அறி​வியல் மற்றும் ஆங்​கிலம் பாடங்​களுக்​கான தேர்​வு​கள் முடிந்​த நிலையில், இன்று சமூக அறிவியல் பாடத்தேர்வு நடைபெற்று முடிந்துள்ளது. இந்நிலையில் தான், இன்று முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கும் கோடை விடுமுறை தொடங்கியுள்ளது.

இந்நிலையில், தேர்​வுத் துறை அதி​காரி​கள் கூறுகையில், ‘‘மாணவர்​களின் விடைத்​தாள்கள் 118 மண்டல சேகரிப்பு மையங்​களுக்கு எடுத்​துச் செல்​லப்​படும். அங்​கிருந்து திருத்​துதல் மையங்​களுக்கு ஏப்ரல் 17ஆம் தேதி முதல் அனுப்பி வைக்கப்பட்டு, ஏப்​ரல் 21ஆம் தேதி முதல் 30ஆம் தேதி வரை விடைத்​தாள் திருத்​தும் பணி​கள் நடைபெறும். இதனைத் தொடர்ந்து, தேர்வு முடிவு​கள் மே 19ஆம் தேதி வெளி​யிடப்​படும்” என்று தெரிவித்துள்ளனர்.

Read More : தமிழ்நாட்டை உலுக்கிய சம்பவம்..!! 8ஆம் வகுப்பு மாணவனை அரிவாளால் வெட்டிய சக மாணவன்..!! தடுக்க சென்ற ஆசிரியருக்கும் நேர்ந்த சோகம்..!!

English Summary

With the Class 10th public exams over, students are excited as the summer vacation begins today.

Chella

Next Post

திடீர் உடல்நலக்குறைவு… மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அதிமுக முன்னாள் அமைச்சர்…!

Tue Apr 15 , 2025
திடீரென ஏற்பட்ட உடல்நலக் குறைபாடு காரணமாக, அதிமுகவின் முன்னாள் அமைச்சர் திண்டுக்கல் சீனிவாசன், சென்னையில் உள்ள அப்பல்லோ மருத்துவமனையில் இன்று அனுமதிக்கப்பட்டுள்ளார். தமிழக சட்டசபை தேர்தலை முன்னிட்டு, அதிமுக-பாஜக கூட்டணி மாநிலம் முழுவதும் தேர்தல் பூத் குழுக்களை அமைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து ஆலோசனைகள் நடைபெற்று வருகின்றன. இந்தக் காரணத்தால் திண்டுக்கலில் நடைபெற்ற ஒரு முக்கியக் கூட்டத்தில், கட்சியின் பொருளாளராகவும் முன்னாள் அமைச்சராகவும் இருக்கும் திண்டுக்கல் சீனிவாசன் கலந்து […]

You May Like