12ஆம் வகுப்புக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வை மாநிலம் முழுவதும் 8 லட்சத்து 21 ஆயிரம் மாணவ, மாணவிகள் எழுதியிருந்தனர். இந்நிலையில், பொதுத்தேர்வுக்கான முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டது. பொதுத்தேர்வு எழுதிய மாணவர்களில் மொத்தம் 7.53 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகள் 4.54 லட்சம் பேரும், மாணவர்கள் 3.57 லட்சம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். இதில் அரசுப் பள்ளிகள் மாணவர்கள் 91.94% தேர்ச்சி பெற்றுள்ளனர்.
இந்நிலையில், 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வில் திண்டுக்கல் மாவட்டம் பழனியை சேர்ந்த மாணவி ஓவியாஞ்சலி 599 மதிப்பெண்கள் எடுத்து சாதனை படைத்துள்ளார். ஆங்கிலத்தை தவிர அனைத்து பாடங்களிலும் 100/100 மதிப்பெண் எடுத்துள்ளார். இதையடுத்து, மாணவி ஓவியாஞ்சலிக்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.
அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற முதல் 5 மாவட்டங்கள் :
அரியலூர் – 98.82 சதவீதம்
ஈரோடு – 97.98 சதவீதம்
திருப்பூர் – 97.53 சதவீதம்
கோவை – 97.48 சதவீதம்
கன்னியாகுமர் – 97.01 சதவீதம்