fbpx

நாளை 144 தடை உத்தரவு பிறப்பிப்பு..!! 5 நபர்களுக்கு மேல் ஒன்றாக செல்ல தடை..!! பெரும் பரபரப்பு…!!

கர்நாடக சட்டமன்றத் தேர்தல் வாக்குப்பதிவு நிறைவடைந்து, நாளை வாக்குகள் எண்ணப்பட உள்ள நிலையில், உடுப்பி மாவட்டத்தில் 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.

224 சட்டமன்றத் தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டப்பேரவைக்கு நேற்று முன்தினம் ஒரே கட்டமாக வாக்குப்பதிவு நடைபெற்றது. இந்த தேர்தலில் 72.67 சதவீத வாக்குகள் பதிவாகின. மாநிலம் முழுவதும் தேர்தல் நடத்தி முடிக்க 440 கோடி ரூபாய் செலவானதாக தகவல் வெளியாகியுள்ளது. 50 ஆயிரத்துக்கும் அதிகமான மையங்களில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படுகின்றன. வாக்கு எண்ணும் பணிகள் தொடர்பாக அதிகாரிகளுக்கு சிறப்பு பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.

வாக்கு எண்ணும் மையங்களில் 3 அடுக்கு பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. வாக்கு எண்ணிக்கை அமைதியாக நடப்பதை உறுதி செய்யும் வகையில் உடுப்பி மாவட்டத்தில் நாளை 144 தடை உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 5 நபர்களுக்கு மேல் செல்லவும், பட்டாசு வெடிக்கவும் அதிரடியாக தடை விதிக்கப்பட்டுள்ளது. சிவமொக்காவில் வாக்கு எண்ணும் மையங்களை சுற்றி 144 தடை உத்தரவு அமல்படுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. காலை 8 மணிக்கு வாக்கு எண்ணிக்கை தொடங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பாலஸ்தீனத்தின் மீது இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 30 பேர் பரிதாப பலி…..! பாலஸ்தீன அரசு பரபரப்பு புகார்…..!

Fri May 12 , 2023
சமீபத்தில் இஸ்ரேல் நாட்டில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் விதமாக, காசாநகர் மீது இஸ்ரேல் ராணுவம் குண்டு மழை பொழிந்து வருகிறது. அதிலும் குறிப்பாக காசாவின் தெற்கு பகுதியில் இருக்கின்ற கட்டிடங்களை குறிவைத்து இஸ்ரேல் ராணுவம் வான்வழி தாக்குதலை நடத்தி வருகின்றது. சென்ற செவ்வாய்க்கிழமை முதல் இரவு, பகலாக நடத்தப்பட்டு வரும் இந்த தாக்குதலில் பாலஸ்தீன இஸ்லாமிய ஜிகாத் தலைவர்கள் 2 பேர் உட்பட 30 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதோடு, […]

You May Like