தென்காசி மாவட்டத்தில் கிணறு தோண்டும் பணிக்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததில் 3 பேர் உயிரிழந்தனர்..
தென்காசி அருகே ஆலங்களம் அருகே உள்ள ராம்நகர் பகுதியில் இன்று கிணறு தோண்டும் பணி நடைபெற்றது.. இதில் ஆணையபுரத்தை சேர்ந்த அரவிந்த், ஆலங்குளத்தை சேர்ந்த ஆசீர் சாம்சன் உள்ளிட்டோர் இந்த பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.. அப்போது கிணறு தோண்டுவதற்காக வைக்கப்பட்ட வெடி வெடித்ததன் காரணமாக, 2 பேர் உயிரிழந்தனர்.. அரவிந்த் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், ஆசீர் சாம்சன் மருத்துவமனைக்கு கொண்டு செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்..
மேலும் இந்த சம்பவத்தில் காயமடைந்த இருவர் ஆலங்குளம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.. இந்நிலையில் ராஜலிங்கம் என்பவரும் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.. இதனால் பலி எண்ணிக்கை 3ஆக உயர்ந்துள்ளது.. இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.. கிணறு தோண்ட அனுமதி பெற்றுள்ளனரா, கிணறு தோண்டுவதற்கான விதிமுறைகள் சரியாக பின்பற்றப்பட்டுள்ளதா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்..