fbpx

மனைவி, குடும்பத்தை பற்றிய தகவலை பொதுவெளியில் பகிராத கவுண்டமணி!. இதுதான் காரணம்!. ரகசியத்தை வெளியிட்ட பயில்வான் ரங்கநாதன்!.

Goundamani: தமிழ் சினிமாவின் மூத்த நடிகரான கவுண்டமணி, தனது அசத்தலான காமெடி டயலாக் டெலிவரி மூலம் ரசிகர்களை கவர்ந்தவர். 1970 களில் இருந்து தனது திரை வாழ்க்கையை கவுண்டமணி துவங்கினார். 16 வயதினிலே, கிழக்கே போகும் ரயில், நெற்றிக்கண் போன்ற படங்களில் நடித்து வந்தார். சிவாஜி, ரஜினி, கமல், விஜயகாந்த், சத்யராஜ், விஜய், அஜித் என பல முன்னணி நட்சத்திரங்களுடன் இணைந்து நடித்துள்ளார். கிட்டதட்ட 50 ஆண்டுகளுக்கும் மேலாக சினிமாவில் பயணித்து வருகிறார்.

சாந்தி என்பவரை நடிகர் கவுண்டமணி திருமணம் செய்துகொண்டார். கவுண்டமணி – சாந்தி தம்பதிக்கு இரு மகள்கள் உள்ளனர். இவர் தற்போது ‘ஒத்த ஓட்டு முத்தையா’ திரைப்படத்தில் நடித்து வருகிறார். இந்த சூழலில் கடந்த 5ம் தேதி அவரது மனைவி சாந்தி (வயது.67) உடல்நலக்குறைவால் காலமானார். இது திரையுலகைச் சேர்ந்தவர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

இருப்பினும், திரையுலகில் இவ்வளவு பிரபலமாக இருந்தாலும் தனது குடும்பம், மனைவி, குழந்தைகள் பற்றிய தகவல்களை பொதுவெளியில் கூறுவதை கவுண்டமணி தவிர்த்து வந்தார். குடும்பத்தை பற்றி ஏதாவது கேட்டால், என் குடும்பத்தை பற்றிய தெரிந்து கொள்வதில் மற்றவர்களுக்கு என்ன ஆர்வம் என்று கேட்பார். என்னுடைய மனைவி மகள்கள் அனைவரும் நன்றாக இருக்கிறார்கள் என்று பதில் சொல்லிவிட்டு சென்றுவிடுவார். திரைப்பிரபலங்களின் திருமணம், வீட்டு விசேஷம் என எதுவாக இருந்தாலும், தனியாகத்தான் செல்வார். அதேபோல, எல்லா விசேஷத்திற்கும் சென்றுவிட மாட்டார். ரொம்ப முக்கியமான விசேஷமாக இருந்தால் மட்டுமே செல்வார். அவருக்கு கடவுள் மீது அவ்வளவாக நம்பிக்கை இல்லை என்பதால் கோவிலுக்கு கூட செல்வதில்லை என்று கூறப்படுகிறது.

கவுண்டமணிக்கும் அவரது மனைவி சாந்திக்கு இடையே 20 வயது வித்தியாசம் என்று கூறப்படுகிறது. ஒரு சில படத்திலும் அவர் துணை நடிகையாக நடித்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்போது தான் இருவருக்கும் காதல் ஏற்பட்டு இருவரும் திருமணம் செய்து கொண்டதாக கூறப்படுகிறது. சுமித்ராவிற்கு மட்டும் கொஞ்சம் விமர்சையாக திருமணம் நடைபெற்றது. அந்த திருமணத்தின் போது எடுக்கப்பட்ட ஒன்று இரண்டு போட்டோத்தான் இணையத்தில் உள்ளது. மற்றபடி, கவுண்டமணி குடும்பத்தின் எந்த போட்டோவும் இல்லை என்று பயில்வான் ரங்கநாதன் தெரிவித்துள்ளார்.

Readmore: அரசு ஊழியர்களுக்கு அடித்த ஜாக்பாட்..!! பண்டிகை கால முன்பணம் ரூ.20,000ஆக உயர்வு..!! தமிழ்நாடு அரசு அரசாணை வெளியீடு..!!

English Summary

20 years!. Goundamani shared information about his wife and family in public!. This is the reason!. Ranganathan reveals the secret!.

Kokila

Next Post

ஆண்டு தோறும் 1.90 கோடி புற்றுநோய்கள் பதிவு!. உடலில் தொடர்ந்து வலி இருந்தால் அலட்சியம் வேண்டாம்!. அறிகுறிகளை புறக்கணிக்காதீர்கள்!.

Wed May 7 , 2025
Do you have constant pain anywhere in your body? It's a sign of cancer!

You May Like