fbpx

காவல் நிலையத்தில் மது அருந்திய போலீசார் ….

கர்நாடக மாநிலம் கோலார்மாவட்டத்தில் உள்ள காவல்நிலையத்தில் பணியாற்றும் காவலர்கள் 3 பேர் காவல் நிலையத்திலேயே மது அருந்தியது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

கோலார் மாவட்டம் ஸ்ரீனிவாஸ்பூர் தாலுகாவில்உள்ள கவுனி பள்ளி காவல்நிலையத்தில் காவலர்கள் சலபதி, அஞ்சி, மஞ்சுநாத் ஆகிய 3 பேரும் நேற்று காவல் நிலையத்தில் இருந்தபோதே மது அருந்தியுள்ளனர். இது குறித்த வீடியோ சமூக வலைத்தலங்களில் பரவி அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

காவல்நிலையத்தில் பணியின் போதே மதுக்கடையாக மாற்றியுள்ள காவலர்கள் மீது விரைவில் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கேட்டுக் கொண்டுள்ளனர். இதனிடையே இவர்கள் மூன்று பேரையும் உயரதிகாரிகள் அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் மற்ற காவல்நிலையங்களுக்கும் இது போன்ற செயல்களின் காவலர்கள் ஈடுபட்டால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று சுற்றறிக்கை அனுப்பப்பபட்டது. காவல்நிலையத்தை மது பாராக மாற்றப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Next Post

பீர் பாட்டிலால் கழுத்தை அறுத்த எம்.எல்.ஏ. உதவியாளர். .. ஆசைக்கு இணங்க மறுத்ததால்  வெறிச்செயல்…

Mon Sep 19 , 2022
ஆசைங்கு இணங்க மறுத்ததால் ஆத்திரமடைந்த எம்.எல்.ஏ.வின் உதவியாளர் பெண்ணின் கழுத்தை பீர்பாட்டிலால் குத்தி அறுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. தெலுங்கானா மாநிலம் ஐதராபாத்தில் சட்டமன்ற உறுப்பினர் மாகண்டி கோபிநாத். இவரது தனிப்பட்ட உதவியாளராக விஜயசிம்கா என்பவர் பணியாற்றி வருகின்றார். சமீபத்தில் விநாயகர் சதுர்த்தி விழா நடைபெற்றபோது இந்நிகழ்ச்சியில் பங்கேற்ற 35 வயது பெண் நிஷா என்பவருடன் சட்டமன்ற உறுப்பினர் உதவியாளர் விஜய் சிம்காவுக்கு மிகவும் நெருக்கமாகியுள்ளார். நிஷாவுக்கு திருமணமாகி சூரஜ் […]

You May Like