திண்டுக்கல் மாவட்டம் வி எம் ஆர் பட்டி ரோமன் மிஷின் முதல் தெரு பகுதியைச் சேர்ந்தவர் அந்தோணி (65) இவர் ஒரு கட்டிட கூலி தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார் இவருக்கு திருமணம் ஆகி மனைவியும் ஒரு மகனும், மகளும் இருக்கிறார்கள். மகனுக்கும் மகளுக்கும் திருமணம் முடிந்த நிலையில், இருவரும் திண்டுக்கல்லில் வசித்து வருகின்றனர் சென்ற 10 வருடங்களுக்கு முன்னர் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக, மனம் அந்தோணி வீட்டை விட்டு வெளியேறி காவி உடை தரித்து யாசகம் பெற்று வாழ்ந்து வருகிறார்.
மேலும் தான் யாசகமாக பெற்ற பணத்தை வங்கியில் சேர்த்து வைத்து ஆலயங்களுக்கு தான தர்மங்களை செய்து வருகிறார். இத்தகைய நிலையில் தான் வீட்டை விட்டு வெளியேறிய அந்தோணி திண்டுக்கல் பொன் சீனிவாசன் நகர் அருகேயுள்ள அண்ணாநகர் பகுதியில் ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து தங்கி வந்தார். இந்த நிலையில், நேற்று முன் தினம் மதியம் வீட்டில் அவர் ஓய்வெடுத்துக் கொண்டிருந்த போது அங்கு வந்த ஒரு மர்ம நபர் திடீரென்று உறங்கிக் கொண்டிருந்த அந்தோணியை பலமான கூறிய ஆயுதங்களை கொண்டு தலையில் தாக்கி விட்டு தப்பி சென்றார்.
இதில் அலறி துடித்த அந்தோணியின் சத்தம் கேட்டு அருகில் இருந்த நபர்கள் அவரை மீட்டு திண்டுக்கல் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து, திண்டுக்கல் தெற்கு காவல் துறையினர் வழக்கு பதிவு செய்து கொலைக்கான காரணம் தொடர்பாகவும், கொலையாளிகள் யார்? என்பது தொடர்பாகவும் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இவருக்கு ஒய் எம் ஆர் பட்டியில் சொந்தமான வீடு இருக்கிறது, இந்த வீட்டின் மீது குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சனையின் காரணமாக நீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. அதோடு கொலை நடைபெற்ற இடத்தில் திண்டுக்கல் மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் பாஸ்கரன் நேரில் சென்று விசாரணை நடத்தினார். இதனை தொடர்ந்து மோப்பநாய் வரவழைக்கப்பட்டு கொலையாளியை தேடும்படணியில் ஈடுபட்டனர். அதிகம் இருக்கின்ற பகுதியில் இந்த கொலை சம்பவம் நடைபெற்று இருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.