fbpx

உணவகம் முன்பு நிறுத்தப்பட்டிருந்த காரின் கண்ணாடியை உடைத்து 70 லட்சம் ரூபாய் திருட்டு……! கோவையில் அதிர்ச்சி சம்பவம்……!

கோவையை அடுத்துள்ள எஸ் எஸ் குளம் பகுதியைச் சேர்ந்தவர் ஈஸ்வரமூர்த்தி (51) ரியல் எஸ்டேட் அதிபர் ஆன இவர் நேற்று முன்தினம் இரவு தொழில் ரீதியாக கண்ணன் என்பதற்கு பணம் கொடுப்பதற்காக 70 லட்சம் ரூபாய் பணத்துடன் தனது அவிநாசி சாலை சிட்ரா அருகே வருகை தந்துள்ளார் இந்த நிலையில் கண்ணன் வருவதற்கு தாமதமாகும் என்பதால் காரை அன்னபூர்ணா என்ற உணவகத்தின் நிறுத்திவிட்டு இரவு உணவை சாப்பிடுவதற்காக சென்றார்.

சாப்பிட்டுவிட்டு வெளியே வந்து பார்த்தபோது அவரது காரின் கண்ணாடி உடைக்கப்பட்டு இருப்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்தார். வைத்திருந்த 70 லட்சம் ரூபாய் பணம் திருடு போய் இருப்பது தெரிய வந்தது.

ஆகவே அவர் இந்த சம்பவம் குறித்து பீளமேடு காவல் நிலையத்தில் புகார் வழங்கினார் இந்த புகாரின் அடிப்படையில், வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் அங்கு பொறுத்துக் கொண்டு இருந்த கண்காணிப்பு கேமரா காட்சிகளை வைத்து கார் கண்ணாடி உடைத்து பணத்தை திருடி சென்ற நபர்கள் தொடர்பாக விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Post

மாணவர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கும் விழா..!! பேனர் வைக்கக் கூடாது..!! நடிகர் விஜய் அதிரடி உத்தரவு..!!

Fri Jun 16 , 2023
நடிகர் விஜய் திரைப்படங்களில் நடிப்பதைத் தாண்டி விரைவில் அரசியல் கட்சி தொடங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அதுவும் குறிப்பாக தன்னுடைய 70-வது திரைப்படத்தை முடித்துக் கொண்டு நடிகர் விஜய், முழு நேர அரசியலில் ஈடுபடுவார் என்று தெரிகிறது. இந்நிலையில், பல்வேறு அரசியல் நிகழ்வுகளை அவருடைய விஜய் மக்கள் இயக்கம் செய்து செய்து வருகிறது. அதில் முதல் கட்டமாக பல்வேறு தலைவர்களின் சிலைக்கு மரியாதை செய்து வருகின்றனர். இந்நிலையில், 10 மற்றும் 12ஆம் […]

You May Like