உத்தரப்பிரதேச மாநில பகுதியில் உள்ள அபூபுர் கிராமத்தில் சைலேந்திர குமார் தனது மனைவி, மகளுடன் வசித்து வருகிறார். மேலும் இவர், மதுவுக்கு அடிமையானவர் என்பதும் அதனால் அவர்கள் இவருக்கும் இடையே தகராறு நடைபெற்றுள்ளது.
இந்த நிலையில், ஒருநாள் குடிபோதையில் மனைவியிடம் தகராறு செய்து கொண்டிருந்த நிலையில், அம்மாவுக்கு ஆதரவாக மகள் ஷாலினி (18) பேசியுள்ளார். இதனை தொடர்ந்து சண்டை தீவிரமாக சென்ற நிலையில், தன்னிடம் இருந்த துப்பாக்கியை எடுத்து மகளை சுட்டுக்கொன்று விட்டார். அத்துடன் அங்கிருந்து சைலேந்திர குமார் தப்பியோடி விட்டார்.
இது பற்றி அளித்த புகாரின் பேரில் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்த தலைமறைவான குமாரை தேடி வருகின்றனர்.