டெல்லியில் காற்றின் தரத்தை மேம்படுத்தும் வகையில், நாளை முதல் வெளி மாநிலங்களில் இருந்து வரும் அனைத்து டீசல் பேருந்துகளுக்கும் தடை விதிக்கப்படுவதாக அம்மாநில சுற்றுச்சூழல் துறை அமைச்சர் கோபால் ராய் தெரிவித்துள்ளார்.
தீபாவளி பண்டிகை நெருங்கும் நிலையில், அதற்கு முன்பாகவே டெல்லியில் காற்றின் தரம் மோசமடைந்து வருகிறது. இதனால் குளிர்கால செயல் திட்டத்தின் கீழ் காற்றின் தரத்தை மேம்படுத்தும் நடவடிக்கைகளை டெல்லி அரசு எடுத்து வருகிறது. இந்நிலையில், டெல்லியில் கடந்தாண்டு அக்.29ஆம் தேதி 397 ஆக இருந்த காற்று தரக்குறியீடு தற்போது 325 ஆக குறைந்துள்ளது.
இதனை மேலும் மேம்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக அமைச்சர் கூறினார். டெல்லியில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளும் மாசுக்களை ஏற்படுத்தும் எரிபொருட்களில் இருந்து இயற்கை எரிவாயுக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் சிவப்பு சிக்னலின் போது, வாகனங்களின் எஞ்சினை அணைக்க விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுவதாகவும் அவர் தெரிவித்தார்.
மேலும், நாளை முதல் வெளி மாநிலங்களில் டீசலில் இயங்கும் பேருந்துகள், டெல்லி – ஏசிஆர் பகுதியில் நுழைய தடை விதிக்கப்படுவதாகவும் மாற்று எரிபொருளை பயன்படுத்த அறிவுறுத்தப்படும் என்றும் அமைச்சர் கோபால் ராய் தெரிவித்தர்.