fbpx

“அல்லா.. இந்தியாவிடம் இருந்து எங்கள் பாகிஸ்தான் நாட்டை காப்பாற்றுங்கள்”..!! பாராளுமன்றத்தில் கண்ணீர் மல்க கதறிய எம்பி..!!

”ஆபரேஷன் சிந்தூர்” என்ற பெயரில் நடத்தப்படும் இந்தியாவில் தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கப்படும் என்று பாகிஸ்தான் கூறியிருந்தது. இதை தொடர்ந்து பாகிஸ்தான் நேற்று முதல் இந்தியாவின் முக்கிய நகரங்களை குறிவைத்து ஏவுகணைகளை வீசி வருகிறது. எனினும் இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்பு மூலம் இந்த தாக்குதல் முயற்சி முறியடிக்கப்பட்டு வருகிறது.

அந்த வகையில் நேற்றிரவு ஜம்மு, பதான்கோட் மற்றும் உதம்பூரில் உள்ள இந்திய இராணுவ நிலைகளை குறி வைத்து பாகிஸ்தான் ஏவிய ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகளை இந்திய பாதுகாப்பு படை அதனை திறம்பட முறியடித்தன. இதற்கு பதிலடி கொடுக்கும் விதமாக, பாகிஸ்தானின் தலைநகர் இஸ்லாமாபாத் மற்றும் லாகூர் மற்றும் சியால்கோட்டை இந்தியா தாக்கியது.

ஜம்மு காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத்தில் உள்ள பல நகரங்கள் மற்றும் நகரங்கள் வெவ்வேறு கால இடைவெளிகளில் மின் தடையை சந்தித்தன, அதிகாரிகள் குடிமக்களுக்கு ஆலோசனைகளை வழங்கியதுடன், பாதுகாப்பை உறுதி செய்தனர். பாகிஸ்தான் கட்டுப்பாட்டுக் கோட்டில் போர் நிறுத்தத்தை மீறி துப்பாக்கிச் சூடு நடத்தி வருகிறது. இதற்கு இந்திய ராணுவமும் பதிலடி கொடுத்து வருகிறது.

இந்நிலையில், பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் முன்னாள் ராணுவ மேஜரும், எம்பியுமான தாரிக் இக்பால் கண்ணீர் மல்க பேசியுள்ளார். அவர் பேசுகையில், ”நாம் பலவீனமாக இருக்கிறோம். இதனால், அனைத்து எம்பிக்களும் அல்லாவிடம் பிரார்த்தனை செய்ய வேண்டும். அல்லாவே மண்டியிட்டு கேட்டு கொள்கிறோம். எங்களின் நாட்டை காப்பாற்று. உங்களால் மட்டுமே இந்த நாட்டை காப்பாற்ற முடியும். இந்த நாடு உங்கள் பிரார்த்தனையால் பிறந்தது.

தவறு நம்முடையதாக இருக்கலாம். ஆனால், எப்போதும் நாங்கள் உங்களை பின்பற்றுபவர்கள். அல்லாவே எங்கள் மீது கருணை காட்டுங்கள். உங்கள் கருணையின் ஒரு துளியையாவது எங்களுக்கு கொடுங்கள். நாங்கள் வெற்றி பெறுவோம். எங்கள் எதிரிகளைத் தோற்கடிக்க எங்களுக்கு வலிமை கொடுக்குமாறு பிரார்த்திக்கிறோம்” என்றார். இதன்மூலமே அப்பட்டமாக தெரிகிறது. பாகிஸ்தான் எம்பி தாஹிர் இக்பால் தங்களின் ராணுவ பலத்தை நம்பவில்லை. அதோடு நாங்கள் பலவீனமாக இருக்கிறோம் என்றும் நாங்கள் தவறு செய்தவர்கள் என்றும் ஒப்புக்கொள்கிறார். இதுதொடர்பான வீடியோ சமூக வலைதளங்களில் படுவைரலாகி வருகிறது.

Read More : தரமான சம்பவம்..!! பாகிஸ்தானின் ஐ.எஸ்.ஐ. அலுவலகத்தை குறிவைத்து தாக்கிய இந்தியா..? வெளியான பரபரப்பு தகவல்..!!

English Summary

Former army major and MP Tariq Iqbal broke down in tears while speaking in the Pakistani parliament.

Chella

Next Post

7 ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதிகள் பலி..! எல்லைப் பாதுகாப்பு படைவீரர்கள் அதிரடி…! வீடியோ வெளியீடு…

Fri May 9 , 2025
7 terrorists killed in attack attempt..! Border Security Force soldiers in action...!

You May Like