fbpx

மாட்டுக்கறி சாப்பிட்ட திமிருல ஆடுறியா..? இஸ்லாமிய பள்ளி மாணவியை அவமானப்படுத்திய ஆசிரியை..!!

கோவை மாவட்டம் துடியலூர் பகுதியில் அரசு மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இங்கு 7ஆம் வகுப்பில் இஸ்லாமிய சமூகத்தை சேர்ந்த மாணவி ஒருவர் படித்து வருகிறார். இவர், கோவை முதன்மை கல்வி அலுவலகத்தில் ஆசிரியை அபிநயா மீதும், பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரி மீதும் புகார் ஒன்றை அளித்தார். அந்த புகாரில், வகுப்பு ஆசிரியை அபிநயா என்பவர் மாணவியிடம் கடுமையாக நடந்து கொண்டதாகவும், இதை தொடர்ந்து மாணவி பெற்றோருடன் வந்து ஆசிரியை அபிநயா குறித்து தலைமை ஆசிரியரிடம் முறையிட்டதாகவும் தெரிவித்துள்ளார்.

தலைமை ஆசிரியரிடம் முறையிட்டது குறித்து ஆசிரியை அபிநயா மாணவியிடம் வகுப்பறையில் கேட்டதாகவும், அப்போது ’உனது பெற்றோர் என்ன வேலை செய்கின்றனர்?’ என்ற கேள்விக்கு, மாட்டிறைச்சி கடை வைத்திருப்பதாக மாணவி கூறியுள்ளர். அதற்கு “மாட்டுக்கறி சாப்பிட்டு திமிருடன் ஆடுறியாடி” என்று அபிநயா சொன்னதாகவும், அதற்கு மாணவி எனது பெற்றோரை பற்றியும் தொழிலை பற்றியும் ஏன் பேசுகிறீர்கள்? என்று பதிலுக்கு பேசியதற்கு, ஆத்திரம் நடந்த அபிநயா மாணவியை கண்ணத்தில் அடித்ததாக புகார் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இச்சம்பவம் தொடர்பாக பெற்றோருடன் பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேஸ்வரிடம் முறையிட்டபோது அவரும் மிரட்டுகின்றீர்களா? என்று கூறியதாகவும், மாட்டுக்கறி சாப்பிடுவியா? என்று சக மாணவிகள் மத்தியில் வைத்து கேட்டும், சூவை துடைக்க வைத்தும் துன்புறுத்தியதாகவும், தனது படிப்புக்கு இவர்களால் பாதிப்பு இருக்கும் என்ற அச்சமாக எழுந்துள்ளதாகவும் அந்த புகாரில் மாணவி கூறியுள்ளார். இந்நிலையில், இச்சம்பவம் குறித்து கல்வித்துறை அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

Chella

Next Post

அபூர்வ வளர்ச்சி கண்ட கிரிக்கெட் வீரர்களின் சம்பளம்!… 1980-90களில் எவ்வளவு தெரியுமா?… கபில் தேவ் முதல் விராட் கோலி வரை!

Wed Nov 22 , 2023
கடந்த 1983ல் இந்தியா உலககோப்பை வென்றபோது அணியின் வீரர்களுக்கு வழங்கப்பட்ட பரிசுத்தொகை குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. உலகம் முழுவதும் சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவரும் விரும்பி விளையாடும் விளையாட்டாக கிரிக்கெட் உள்ளது என்றால் அது மிகையாகாது .ஆரம்பத்தில் பொழுது போக்காக விளையாட ஆரம்பித்த இந்த விளையாட்டு காலப்போக்கில் ஒரு நாட்டின் தேசிய விளையாட்டாக இருக்கும் அளவுக்கு வளர்ச்சி அடைந்துள்ளது .மற்றும் பணம் சம்பாதிக்கும் தொழிலாகவும் மாறி […]

You May Like