fbpx

ஆசிய கபடி சாம்பியன்ஷிப்!… வெற்றி வாகை சூடிய இந்திய அணி!… ஈரானை வீழ்த்தி 8வது முறையாக சாம்பியன்!

ஆசிய கபடி சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் ஈரானை வீழ்த்தி இந்தியா தங்கம் வென்றது.

இந்தியா, ஜப்பான், ஈரான், சைனீஸ் தைபே, தென்கொரியா, ஹாங்காங் ஆகிய நாடுகள் பங்கேற்கும் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் போட்டி கடந்த 27ஆம் தொடங்கி நடைபெற்று வருகிறது. இதுவரை 10 முறை நடந்து முடிந்துள்ள இந்த தொடரில் 7 முறை தங்க பதக்கம் வென்ற அணியாக இந்தியா கம்பீரமாக இந்த தொடரிலும் ஆரம்பம் முதலே ஆதிக்கம் செலுத்தி வருகிறது. முதல் நாளிலேயே இரண்டு வெற்றிகளை இந்தியா பெற்றிருந்தது. முதல் போட்டியில் 76-13 என்ற கணக்கில் கொரியாவையும், 53-19 என்ற கணக்கில் சைனீஸ் தைபே அணியையும் வென்றது. இதனை தொடர்ந்து நேற்று முன்தினம் நடந்த ஆட்டத்தில் ஜப்பான் அணியை எதிர்கொண்டு 62-17 என்ற கணக்கில் வெற்றி வாகை சூடியது. இதனை தொடர்ந்து நேற்றைய ஆட்டத்தில் புள்ளி பட்டியலில் இந்தியாவிற்கு அடுத்த இடத்தில் 3 தொடர் வெற்றிகளை பெற்ற ஈரான் அணியுடன் மோதியது.

இதில், பரபரப்பாக சென்ற ஆட்டத்தில் 33–28 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தி இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது .இந்நிலையில் இன்று நடைபெற்ற இறுதிப்போட்டியில், பவன் செராவத் தலைமையிலான இந்தியா ஈரானுடன் மோதியது. இதில் இந்திய அணி வீரர்கள் தங்களது திறமையான ஆட்டத்தால் 42-32 என்ற புள்ளி கணக்கில் ஈரானை வீழ்த்தினர். இதனால், 11வது சீசன் ஆசிய கபடி சாம்பியன்ஷிப் லீக் போட்டியில் கோப்பையை இந்திய அணி கைப்பற்றி, 8வது முறை சாம்பியன் பட்டம் வென்றது. இந்த போட்டியின் போது இந்தியா இரண்டு நாட்கள் நடைபெற்ற இரண்டு போட்டிகளிலும் ஈரானை தோற்கடித்தது என்பது குறிப்பிடத்தக்கது.

Kokila

Next Post

இன்று முதல் ரேஷன் கடைகளில் 10 கிலோ இலவச அரிசி வழங்கும் திட்டம்...! யார் யாருக்கு இது பொருந்தும்..? முழு விவரம்

Sat Jul 1 , 2023
ரேஷன் கடைகளில் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று கர்நாடகா அரசு இன்று முதல் தொடங்க உள்ளது. கர்நாடகாவில் புதிதாக அமைக்கப்பட்ட காங்கிரஸ் அரசு, அரசுப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவசப் பயணம் செய்வதற்கான சக்தி திட்டத்தை ஏற்கனவே தொடங்கியுள்ளது, ஏழைக் குடும்பங்களில் ஒவ்வொருவருக்கும் 10 கிலோ அரிசி வழங்கும் அன்ன பாக்யா திட்டத்தைத் இன்று முதல் தொடங்கப்பட உள்ளது. 90 சதவீத ஏழைப் பயனாளிகளின் வங்கி […]

You May Like