திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வரும் ஜனவரி 2ம் தேதி வைகுண்ட ஏகாதசியொட்டி வைகுண்ட நுழைவு வாயில் திறக்கப்பட்டு 11ம் தேதி வரை பக்தர்கள் அனுமதிக்கப்பட உள்ளனர். சொர்க்கவாசல் திறந்திருக்கும் நாட்களில் ஏழுமலையானை வழிபடுவதற்காக வரும் பக்தர்களுக்கு நாள் ஒன்றுக்கு 2000 பேர் என்ற எண்ணிக்கையில் இன்று சிறப்பு ஏற்பாட்டின் பேரில் 300 டிக்கெட்டுகளை தேவஸ்தான நிர்வாகம் விற்பனை செய்ய உள்ளது.
இந்த தரிசனத்திற்காக ஸ்ரீவாரி அறக்கட்டளைக்கு ஒரு பக்தர் 10ஆயிரம் ரூபாய் நன்கொடையாக அளித்து 300 தரிசன டிக்கெட்டை பெற்றுக்கொள்ள வேண்டும். இந்த டிக்கெட்டுகளை ஆன்லைனில் முன்பதிவு செய்யும் பக்தர்களுக்கு ஜெய விஜய துவார பாலகர்கள் சிலை வரை மட்டும் அனுமதிக்கப்பட்டு மகா லகு தரிசனம் செய்து வைக்கப்படும்.
ஒவ்வொரு டிக்கெட்டுக்கும் தலா 10,000 ரூபாய் நன்கொடையும் டிக்கெட் கட்டணமாக தலா 300 ரூபாயும் செலுத்தி பக்தர்கள் பெற்றுக்கொள்ளலாம். இந்த தரிசனத்திற்கான் டிக்கெட் இன்று காலை 9 மணிக்கு ஆன்லைனில் தொடங்குகிறது, tirupathibalaji.ap.gov.in என்ற இணையதளம் மூலம் பக்தர்கள் முன்பதிவு செய்து கொள்ளாலாம்.