fbpx

தீபாவளிக்கு தயாராகும் ஆவின் சிறப்பு இனிப்புகள்..! இந்தாண்டு விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?

தீபாவளி பண்டிகைக்கு ஆவின் சிறப்பு இனிப்புகள் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அதிகாரிகளுக்கு பால்வளத்துறை அமைச்சர் நாசர் அறிவுறுத்தியுள்ளார்.

தீபாவளி-2022 பண்டிகையை முன்னிட்டு ஆவினில் சுவைமிகுந்த சிறப்பு இனிப்பு வகைகள் விற்பனை செய்வது குறித்து பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர் தலைமையில், நேற்று ஆய்வுக் கூட்டம் நடைபெற்றது. அதில், கடந்த ஆண்டு தீபாவளியைப் போலவே, இந்த ஆண்டும் கீழ்க்கண்ட சிறப்பு இனிப்புகள் விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டுள்ளது.

தீபாவளிக்கு தயாராகும் ஆவின் சிறப்பு இனிப்புகள்..! இந்தாண்டு விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?
பால்வளத்துறை அமைச்சர் சா.மு.நாசர்

1) காஜூ கட்லீ (250 கி)
2) நட்டி அல்வா (250 கி)
3) மோத்தி பாக் (250 கி)
4) காஜு பிஸ்தா ரோல் (250 கி)
5) நெய் பாதுஷா (250 கி)
6) கார வகைகள்
7) இனிப்பு தொகுப்பு (500 கி) (Combo Box)

தீபாவளி-2022 பண்டிகைக்காகத் தயாரிக்கப்படும் இனிப்பு வகைகளின், தயாரிப்பு மற்றும் விற்பனை இலக்கு தொடர்பாக விரிவான ஆய்வினை அமைச்சர் நாசர், ஆய்வுக் கூட்டத்தின்போது மேற்கொண்டார். அப்போது, தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை மிகுந்த சுவை மிக்கதாகவும் மற்றும் தரமாகவும் தயாரிக்க வேண்டும் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். கருப்பட்டியைப் பயன்படுத்தி சுவையான இனிப்பு வகைகளைத் தயாரிக்கும் வழிவகைகளை ஆராயவும், விரைவில் விற்பனைக்கு அறிமுகப்படுத்தவும் ஆலோசனை வழங்கினார்.

தீபாவளிக்கு தயாராகும் ஆவின் சிறப்பு இனிப்புகள்..! இந்தாண்டு விற்பனை இலக்கு எவ்வளவு தெரியுமா?

கடந்த ஆண்டு தீபாவளி சிறப்பு இனிப்புகள், நெய் மற்றும் பிற பொருட்கள் ரூ.82.00 கோடி அளவில் விற்பனை செய்யப்பட்டதாகவும், இந்த ஆண்டு ரூ.200 கோடி வரை விற்பனை செய்யத் திட்டமிடப்பட்டு அதற்கான அனைத்து விற்பனை உத்திகளை கையாளவும், அரசுத் துறை அலுவலகங்கள், தனியார் நிறுவனங்கள், அரசு ஊழியர்கள், கூட்டுறவு நிறுவனங்கள், போக்குவரத்துத் துறை மற்றும் பிற நிறுவனங்களுக்குத் தேவையான இனிப்பு வகைகளை வழங்க முன்கூட்டியே திட்டமிட எடுத்துரைத்தார்.

மேலும், பொதுமக்கள் அதிகம் கூடும் சந்தைகள், சாலை சந்திப்புகள், பேருந்து நிலையங்கள் போன்ற இடங்களைத் தேர்வு செய்து விற்பனை மேற்கொள்ள வலியுறுத்திய அமைச்சர், தீபாவளி சிறப்பு இனிப்பு வகைகளை ஏற்றுமதி செய்வதற்கான முகாந்திரங்களை ஆராயவும், தக்க அனுமதி மற்றும் தேவையான சான்றிதழ்களைப் பெறுவது குறித்து விரைந்து நடவடிக்கை மேற்கொள்ள அறிவுறுத்தினார்.

Chella

Next Post

’எடப்பாடியிடம் சுமூக உறவு காட்டிட பிரதமர் விரும்பவில்லை’..! - முரசொலி நாளேடு கடும் தாக்கு

Tue Jul 26 , 2022
’டெல்லிக்கு சென்ற எடப்பாடி பழனிசாமியிடம் பிரதமர் மோடி சுமூக உறவு காட்டிட விரும்பவில்லை’ என திமுக நாளிதழான முரசொலியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. முரசொலியில் வெளிவந்த கட்டுரையில், ”அமைச்சர் பெருமக்களுக்கு சம்பிரதாய வணக்கம் என்றும், பிரதமர் மோடியைப் பொறுத்தவரை அதிமுக தரப்பினர் அவரது கிருபை, கடாட்சம் போன்றவை ஓ.பன்னீர்செல்வம் அணிக்கு இருப்பது போல அவரது சமீபத்திய நடவடிக்கைகள் படம் பிடிக்கின்றன. இல்லையேல் ஆசை, ஆசையாக பிரதமரின் அனுக்கிரகத்தைப் பெற்று விடலாம் என்ற நப்பாசையுடன் […]
வரும் 28ஆம் தேதி ஆளுநர் மாளிகையில் எடப்பாடி, ஓபிஎஸை தனித்தனியே சந்திக்கும் பிரதமர்..!

You May Like