அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது..
ரிசர்வ் வங்கி வெளியிட்ட வழிகாட்டுதலின் படி, நாடு முழுவதும் உள்ள பொதுத்துறை, தனியார் துறை, வெளிநாட்டு வங்கிகள், கூட்டுறவு வங்கிகள் மற்றும் பிராந்திய வங்கிகள் குறிப்பிட்ட தேதிகளில் மூடப்படும். இந்த விடுமுறை நாட்கள் நாடு முழுவதும் ஒரே மாதிரியாக இருக்காது. ஒவ்வொரு மாநிலத்திற்கு ஏற்ப வித்தியாசமாக இருக்கும். இருப்பினும், ஆன்லைன் வங்கி சேவை தொடர்ந்து செயல்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. எனவே அடுத்த மாதம் உங்களுக்கு வங்கி தொடர்பான ஏதேனும் முக்கியமான வேலை இருந்தால், விடுமுறை நாட்களை மனதில் வைத்து உங்கள் வேலையைத் திட்டமிட வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
அந்த வகையில் ஜூலை மாதத்தில், நாடு முழுவதும் 14 நாட்களுக்கு வங்கிகள் மூடப்படும். இதில் அடுத்த வாரத்தில் 5 நாட்கள் வங்கிகளுக்கு விடுமுறையாகும்.. ரிசர்வ் வங்கியின் (RBI) இணையதளத்தின்படி, வங்கி விடுமுறைகள் இருப்பிடத்தைப் பொறுத்து மாறுபடும். அனைத்து வங்கிகளுக்கும் இந்த விடுமுறை பொருந்தாது… எனினும் ஒவ்வொரு மாதமும் ஞாயிற்றுக்கிழமை மற்றும் இரண்டாவது மற்றும் நான்காவது சனிக்கிழமைகளில் அனைத்து பொது மற்றும் தனியார் வங்கிகள் மூடப்படும் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.
அடுத்த வாரத்தில் வரும் வங்கி விடுமுறை நாட்கள் :
- ஜூலை 10, 2022: ஞாயிறு
- ஜூலை 11 (திங்கட்கிழமை): ஈத்-உல்-அஷா (ஜம்மு மற்றும் காஷ்மீர்)
- ஜூலை 13 (புதன்கிழமை): பானு ஜெயந்தி (சிக்கிம்)
- ஜூலை 14 (வியாழன்): பென் டியன்க்லாம் (மேகாலயா)
- ஜூலை 16 (சனிக்கிழமை): ஹரேலா (உத்தரகாண்ட்)