ஊரக வளர்ச்சித்துறை அமைச்சர் பெரிய கருப்பன் மீதான வழக்குகளை சென்னை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது.
தமிழக அமைச்சர் பெரிய கருப்பன் மீது கடந்த 2017 ம் ஆண்டு நீட் தேர்வுக்கு எதிராக போராடியது, தேர்தலின் போது அதிக வாகனங்களை பயன்படுத்தியது , அனுமதியின்றி கட்சி அலுகம் திறந்தது என 3 வழக்குகள் அதிமுக சார்பில் போடப்பட்டிருந்தது. இந்த வழக்குகளை ரத்துசெய்ய வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பெரிய கருப்பன் மனுத்தாக்கல் செய்திருந்தார்.

மனுவில் ஜனநாயக ரீதியிலான போராட்டத்தில் பங்கேற்றதற்காக அதிமுக ஆட்சியில் உள்நோக்கத்துடனே வழக்குகள் தொடரப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தார். மனு மீதான விரணை நீதிபதி இளந்திரையன் முன்பு வந்தது. மனுதாரர் தரப்பில் வழக்கறிஞர் முத்துராமலிங்கம் வாதிடுகையில் …. ’’நீட் தேர்வுக்கு எதிராக போராடியது என்பது ஜனநாயக ரீதியிலானது . அனைத்துக் கட்சிகளும் போராட்டம் நடத்தின. என்றார் வாகனங்கள் அதிகமாக பயன்படுத்தியது தொடர்பான வழக்கு வேட்பாளர்கள் பயன்படுத்தியது எனவும் . இது பற்றி மனுதாரருக்கு தெரியாது எனவும் குறிப்பிட்டார். வாதங்களை கேட்ட பின் நீதிபதி இளந்திரையன் 3 வழக்குகளையும் ரத்து செய்தார்.