fbpx

கொத்தனாருடன் கள்ளக்காதல்..!! முதல் காதலன் வேலைக்கு சென்றதும் 2-வது காதலனுடன் உல்லாசம்..!! கடைசியில் நடந்த பயங்கரம்..!!

மதுரை மாவட்டம் உசிலம்பட்டி அருகே செக்காணூரணியை அடுத்த கண்ணனூரைச் சேர்ந்த ராஜா என்பவருக்கும் வாடிபட்டி அருகே குட்லாடம்பட்டி – பூச்சம்பட்டியைச் சேர்ந்த வள்ளி என்பவருக்கு தனித்தனி குடும்பம் உள்ளது. இருவருக்கும் ஏற்பட்ட கள்ளத்தொடர்பால் இருவரும் வீட்டை விட்டு வெளியேறி செக்காணூரணி பசும்பொன் நகரில் வீடு எடுத்து தனிக்குடித்தனம் நடத்தி வாழ்ந்து வந்துள்ளனர்.

வள்ளி சித்தாள் வேலைக்கும், ராஜா டீ கடையிலும் வேலை பார்த்து வாழ்க்கையை நடத்தி வந்துள்ளனர். இதற்கிடையே, வள்ளிக்கும், கீழப்பட்டியைச் சேர்ந்த செல்வம் என்ற கொத்தனாருக்கும் கள்ளக்காதல் மலர்ந்துள்ளது. ராஜா இல்லாத நேரத்தில் கொத்தனாருடன் உல்லாசமாக இருந்து வந்துள்ளார் வள்ளி.

இந்நிலையில், நேற்று இரவு நேர வேலைக்கு டீக்கடைக்கு சென்ற ராஜா, இன்று வீட்டிற்கு வந்ததும் கொத்தனார் செல்வம் இறந்து கிடந்ததைக் கண்டு அதிர்ச்சியடைந்தார். பின்னர், போலீசாருக்கு அவர் தகவல் தெரிவித்த நிலையில், அவர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து முகம் மற்றும் கழுத்து பகுதியில் உள்ள காயங்களின் அடிப்படையில் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர்.

மேலும், இரவு வீட்டில் இருந்த வள்ளி எங்கு சென்றார் என தெரியாத சூழலில் மாயமான வள்ளியையும் போலீசார் வலைவீடி தேடி வருகின்றனர். கள்ளத்தொடர்பு வாழ்க்கை வாழ்ந்து வந்த பெண், மேலும் ஒரு கள்ளத்தொடர்பில் இருந்ததும், அவர் மர்மமான முறையில் இறந்து கிடந்த சம்பவமும் செக்காணூரணி பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Read More : காதலன் நடத்தையில் சந்தேகம்..!! திருமணத்திற்கு ‘No’ சொன்ன காதலி..!! கழுத்தை அறுத்த அதிர்ச்சி சம்பவம்..!!

English Summary

For Valli and Selvam, a mason from Geezapatti, counterfeiting has flourished. Valli has been frolicking with the mason during the king’s absence.

Chella

Next Post

”கைதி 2 பண்ண வேண்டிய லோகேஷை கைது பண்ணி கூலி படம்”..!! ரஜினியை அட்டாக் செய்த ப்ளூ சட்டை மாறன்..!!

Sat Oct 5 , 2024
Famous film critic Blue Shirt Maran has posted a scathing attack on Rajinikanth on his X site.

You May Like