fbpx

மேலும், ஒரு மாணவி ரயில் மோதி மரணம்.. கதறும் சக மாணவிகள்.. சென்னையில் பரிதாபம்.!

சென்னை வண்டலூர் பகுதி இரயில் நிலையத்தில் தண்டவாளத்தின் குறுக்கே சென்று நடைமேடையில் ஏற முயற்சித்த கல்லூரி மாணவி, மீது ரயில் மோதியதில் மாணவி ஒருவர் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கல்லூரி மாணவியான சோனியா (19) தன்னுடைய நண்பர்களுடன் சேர்ந்து வண்டலூர் பூங்காவுக்கு சென்றிருந்தார். அவர்களுடன் மீண்டும் ஊருக்கு திரும்பும் போது வண்டலூர் இரயில் நிலையத்தில் இருக்கும் தண்டவாளத்தில் குறுக்கே நடந்து சென்று நடைமேடையில் ஏறலாம் என்று முயற்சித்துள்ளார்.

சோனியா உயரம் குறைவாக இருந்த நிலையில் அவரால் நடைமேடை ஏற முடியாமல் , தண்டவாளத்தில் மீது நடந்து சென்றிருக்கிறார். அச்சமயத்தில் அங்கு திடீரென வந்த இரயில் மோதியது. அதில் சோனியாவுக்கு பலத்த காயம் ஏற்பட்டதை தொடர்ந்து, சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தது பெரும் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.

இத்தகவல் அறிந்த இரயில்வே போலீசார் விரைந்து சென்று விசாரணையில் ஈடுபட்டு வருகின்றனர். அதனை தொடர்ந்து உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.

Rupa

Next Post

’சும்மா இல்ல’..!! ’ரூ.2.5 லட்சம் புரமோஷனுக்காக செலவு பண்ணிருக்கேன்’.!! பிக்பாஸ் போட்டியாளர் பகீர் தகவல்..!!

Mon Oct 31 , 2022
புரமோஷனுக்காக மட்டும் ரூ.2.5 லட்சம் செலவு செய்துள்ளதாக பிக்பாஸ் போட்டியாளர் ஒருவர் சொன்ன தகவலால் ரசிகர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சி விறுவிறுப்பாக சென்று கொண்டிருக்கிறது. மக்கள் மனதில் இடம்பிடிக்க போட்டியாளர்கள் என்னென்ன செய்ய வேண்டுமோ அதையெல்லாம் செய்து போட்டியை சேஃப்பாக விளையாடுகின்றனர். அதே வேளையில் இந்த நிகழ்ச்சியில் என்னதான் புகழ் பெற்றவர்கள் உள்ளே வந்தாலும் அவர்களுடைய நடவடிக்கைகளை வைத்துதான் மக்கள் வாக்களித்து […]
’சும்மா இல்ல’..!! ’ரூ.2.5 லட்சம் புரமோஷனுக்காக செலவு பண்ணிருக்கேன்’.!! பிக்பாஸ் போட்டியாளர் பகீர் தகவல்..!!

You May Like