fbpx

பரபரப்பு..! வரும் 20-ம் தேதி முதல் தொடர் உண்ணாவிரத போராட்டம்…! அண்ணாமலை அதிரடி அறிவிப்பு..!

ஈரோடு மாவட்டம் சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த 2 வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யவில்லை என்றால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரத போராட்டம் நடத்தப்படும் என பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம், சிவகிரியை அடுத்த விளக்கேத்தி மேகரையான் தோட்டத்தில் வசித்து வந்த வயதான தம்பதிகளான ராமசாமி – பாக்கியம் ஆகியோர், பணம், நகைக்காக, கடந்த 29-ம் தேதி இரவு கொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்தில் தொடர்புடைய குற்றவாளிகளைக் கைது செய்ய வலியுறுத்தி, பாஜக சார்பில் சிவகிரியில் நேற்று மாலை ஆர்ப்பாட்டம் நடந்தது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கண்டு பேசிய பாஜக முன்னாள் மாநில தலைவர் அண்ணாமலை; நாமக்கல் குப்பிச்சிபாளை யம், சென்னிமலை முருங்க தொழுவு, பல்லடம் கள்ளக் கிணறு, சோமலைகவுண்டன் பாளையம் என பல்வேறு இடங்களில் விவசாயிகள் கொலை செய்யப்பட்ட சம்பவம் நடந்துள்ளது. இந்த சம்பவங்களில் குற்றவாளிகள் கைது செய்யப்படாத தால், காவல்துறை மீதான மரியாதை குறைந்து வருகிறது கடந்த 3 ஆண்டுகளில், தமிழகத்தில் 1,319 பாலியல் வன்கொடுமைகள், 4,949 பெண்களுக்கு எதிரான பாலியல் சீண்டல் குற்றங்கள், 16,518 போக்சோ வழக்குகள் பதிவாகி உள்ளன.

சட்டம் ஒழுங்கை கட்டுப்படுத்தும் திறன் இந்த ஆட்சிக்கு இல்லை. திறமையான, தகுதியான இரும்புக்கரம் கொண்டு இவற்றை அடக்கும் முதல்வர் வேண்டும் என்பதற்காக, எப்போது தேர்தல் வரும் என மக்கள் காத்திருக்கின்றனர். சிவகிரி கொலை சம்பவத்தில் அடுத்த இரு வாரங்களில் குற்றவாளிகளைக் கைது செய்யாவிட்டால், வரும் 20-ம் தேதி முதல் சிவகிரியில் தொடர் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும். நீதி கிடைக்கும் வரை இந்த உண்ணாவிரதம் தொடரும் என்றார்.

Read More: அதிகரிக்கும் பதட்டம்!. நாடு முழுவதும் 244 மாவட்டங்களில் சிவில் பாதுகாப்பு மெகா பயிற்சி நடத்த உத்தரவு!. உள்துறை அமைச்சகம் அதிரடி!

English Summary

Continuous hunger strike from the 20th…! Annamalai action announcement

Vignesh

Next Post

தெலங்கானாவில் நில அதிர்வு.. ரிக்டர் அளவு 3.8 ஆக பதிவு...! வீடுகளை விட்டு வெளியேறி மக்கள்...!

Tue May 6 , 2025
Earthquake in Telangana.. 3.8 on Richter scale...! People flee homes

You May Like