ராமேஸ்வரம் பகுதி மீனவர்கள் மறு உத்தரவு வரும் வரை கடலுக்கு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. தென் தமிழக கடலோர பகுதியில் மணிக்கு 65கிமீ வரை சூறை காற்று வீசக்கூடும் என்பதால் மீனவர்கள் யாரும் மறு அறிவிப்பு வரும் வரை கடலுக்கு செல்லவேணடாம் என ராமேஸ்வரம் மீன் வள மற்றும் மீனவர் நலத்துறை உதவி இயக்குனர் உத்தரவிட்டுள்ளார்.
எனினும் ஏற்றுமதி மீன் ரகங்களுக்கு உரிய விலை பெற்றுத்தர ஏற்பாடு செய்துதரக் கோரி விசைப்படகு மீனவர்கள் ஏற்கனவே வெள்ளி நிறுத்தப் போராட்டம் நடத்தி வருகின்றனர், இதனால் சுமார் 700 படகுகள் கடலுக்கு செல்லாமல் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால் நாளொன்றுக்கு 4 முதல் 5 கோடி ரூபாய் வரை வர்த்தகம் பாதிக்கப்படுள்ளது.