தர்மபுரி மாவட்டம் கீழ கொள்ளுப்பட்டியில் வசிக்கும் விவசாயி மாரியப்பன் என்பவருக்கு கவிப்பிரியா என்ற மகள் தனியார் கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.
இந்த நிலையில் கவிப்பிரியாவின் தாய் உடல் நலக்குறைவு காரணமாக பாப்பாரப்பட்டியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதனால், மாரியப்பன் தனது மகளிடம் மாட்டுக்கு புல் அறுத்து போடும்படியும், சமைப்பதுடன், வீட்டு வேலைகளையும் செய்யுமாறு கூறியுள்ளார்.
இதனால் கவிப்பிரியா தண்ணீரில் எலி மருந்தை கலந்து குடித்துள்ளார். இதனையடுத்து மயங்கி விழுந்துள்ளார். அக்கம் பக்கத்தினர் அவரை மீட்டு மருத்துவமனையில் அனுமதித்தனர்.
மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி கவிப்பிரியா பரிதாபமாக உயிரிழந்தார். இது குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.