fbpx

பரபரப்பு…! ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர்…! கட்சி தலைமை எடுத்த அதிரடி நடவடிக்கை…!

தமிழக ஆளுநரை அவதூறாக பேசிய திமுக பேச்சாளர் கட்சியில் இருந்து சஸ்பெண்ட்

சமிபத்தில் திமுக சார்பில் நடத்தப்பட்ட பொதுக்கூட்ட நிகழ்ச்சி ஒன்றில் ஆளுநர் ரவிக்கு எதிராக அக்கட்சியின் பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி மிரட்டல் விடுத்தார். மேலும் ஆளுநர் ரவி சட்டமன்றத்தில் உரை நிகழ்த்திய போது பேப்பரில் எழுதி கொடுத்த படி படித்திருந்தால் அவர் காலில் பூப்போட்டு அனுப்பியிருப்போம்.

ஆனால், தமிழகத்தில் இந்தியாவுக்கு சட்டத்தை எழுதிக் கொடுத்த எங்கள் முப்பாட்டன் அம்பேத்கர் பெயரை சொல்ல மாட்டேன் என்று சொன்னால் ஆளுநரை செருப்பால் அடிக்கும் உரிமை எனக்கு உள்ளது என பல கடுமையான வார்த்தைகளை பயன்படுத்தி பேசி இருந்தார். இது சமூக வலைத்தளங்களில் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து ராஜ்பவன் துணை செயலாளர் பிரசன்ன ராமசாமி சென்னை போலீஸ் கமிஷனருக்கு புகார் அளித்துள்ளார்.

இந்நிலையில், திமுக தலைமை கழக பேச்சாளர் சிவாஜி கிருஷ்ணமூர்த்தி கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கப்பட்டுள்ளார். கட்சியின் கட்டுப்பாட்டை மீறி செயல்பட்டதால் அவர் நீக்கப்பட்டிருப்பதாக பொதுச்செயலாளர் துரைமுருகன் கூறி உள்ளார்.

Vignesh

Next Post

நோ டென்ஷன்...! UPI மூலம் தவறாக பணத்தை அனுப்பி பின் என்ன செய்வது...? முழு விவரம் உள்ளே...

Sun Jan 15 , 2023
உலக அளவில் பல்வேறு நாடுகளில் தொழில்நுட்ப ரீதியாக பல்வேறு வளர்ச்சி கண்டுள்ளது அந்தவகையில் இந்தியாவும் தொழில்நுட்பத்தில் பல்வேறு மாற்றங்களை நிகழ்த்தி வருகிறது. கடந்த சில ஆண்டுகளில் டிஜிட்டல் பரிவர்த்தனைகள் வேகமாக வளர்ந்துள்ளன, வங்கி முதல் ஷாப்பிங் வரை அனைத்தும் ஆன்லைனில் நடக்கிறது. ஒருவரின் வங்கி கணக்கில் பணம் அனுப்ப நீங்கள் இனி வங்கிக்குச் செல்ல வேண்டியதில்லை, அதை வீட்டிலேயே செய்யலாம். இருப்பினும், சில நேரங்களில் அது ஏதேனும் தவறு அல்லது […]

You May Like