உணவு சாப்பிட்ட பிறகு சிலருக்கு வயிற்றில் வெப்பம் ஏற்படுவது போன்ற ஒரு உணர்வு ஏற்படும். இதற்கு பல காரணங்கள் இருக்கிறது. அதுவும் கோடை காலத்தில் இந்தப் பிரச்சனை அதிகமாக உணரப்படுகிறது. செரிமான பிரச்சனைகள், மோசமான உணவுப் பழக்கங்கள், மன அழுத்தம் மற்றும் உடலில் அதிகப்படியான அமிலம் உருவாகும் செயல்முறை போன்றவைகளால் வயிற்றில் வெப்பம் ஏற்படுவது போல் இருக்கும்.
ஒரு சிலர் வறுத்த அல்லது காரமான உணவுகளை சாப்பிட்ட பிறகு இந்தப் பிரச்சனையை சந்திப்பார்கள். இன்னும் சிலருக்கு குளிர்பானங்கள் அல்லது அதிக சர்க்கரை கொண்ட உணவுகளை சாப்பிட்ட பின் இந்த உணர்வுகள் இருக்கும். இது, அசௌகரியத்தை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், ஒருவரின் மன நிலையையும் பாதிக்கும்.
எனவே, இந்தப் பிரச்சனைகளில் இருந்து விடுபட சில இயற்கையானதாகவும், பயனுள்ளதாகவும் கருதப்படும் சில வீட்டு வைத்தியங்களைப் பயன்படுத்துவது சிறந்த பலனை கொடுக்கும். இந்த வைத்தியங்கள் வயிற்றில் உள்ள வெப்பத்தை தணித்து, செரிமானத்தையும் மேம்படுத்தும்.
வயிறு சூட்டை தனிக்கும் வீட்டு வைத்தியங்கள் :
* வயிறு சூட்டை தணிக்க புதினா மற்றும் ஏலக்காய் கலந்த தண்ணீரை குடிக்கலாம்.
* ஒரு டீஸ்பூன் சீரகம் மற்றும் பெருஞ்சீரகத்தை கொதிக்க வைத்து, அந்த தண்ணீரை குடிக்கலாம்.
* தயிரை குளிர்ச்சியாக உட்கொள்வது உங்களுக்கு சிறந்த தீர்வை கொடுக்கும்.
* சாப்பிட்ட பிறகு தேங்காய் தண்ணீர் குடிப்பதால், வயிற்றுக்குள் இருக்கும் வெப்பத்தைக் குறைக்கும்.
* ஒரு டம்ளர் வெதுவெதுப்பான நீரில் அரை டீஸ்பூன் எலுமிச்சை சாறு, ஒரு ஸ்பூன் தேன் சேர்த்து குடிப்பதால் வயிற்று எரிச்சல் குறையும்.
* வெள்ளரிக்காயில் அதிக நீர்ச்சத்து உள்ளதால், வயிற்று வெப்பத்தை தணிக்கும்.
* சாப்பிட்ட பிறகு ஒரு கிளாஸ் மோர் குடித்தாலும் வயிற்று சூடு குறையும்.
Read More : கெமிக்கல் இல்லாத குங்குமம்..!! இனி ஈசியா நீங்களே வீட்டில் தயாரிக்கலாம்..!! எந்த பக்க விளைவுகளும் வராது..!!