fbpx

வருமானவரி தாக்கல் செய்யாவிட்டால் எவ்வளவு அபராதம் தெரியுமா? வெளியான புதிய தகவல்..!

2021-22ஆம் ஆண்டிற்கான வருமானவரி தாக்கல் செய்யாத நபர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என வருமானவரித்துறை எச்சரித்துள்ளது.

2021 – 2022ஆம் நிதியாண்டிற்கு வருமானவரி செலுத்துவதற்கான அவகாசம் ஏப்ரல் மாதம் தொடங்கியது. அதுமுதலாக வரி செலுத்துபவர்களை வருமானவரி தாக்கல் செய்யுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகிறது. ஆண்டுக்கு ரூ.2.5 லட்சத்துக்கு அதிகமாக வருமானம் பெறும் அனைவரும் வருமானவரி தாக்கல் செய்ய வேண்டும். இந்நிலையில், வருமானவரி தாக்கலை அபராதமின்றி செலுத்த இம்மாதம் 31ஆம் தேதி கடைசி தேதியாக அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.

ஜூலை மாதத்திற்கு பின் வருமானவரி தாக்கல் செய்பவர்கள் ஆண்டுக்கு ரூ.5 லட்சத்திற்குள் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் ரூ.1,000 அபராதம் செலுத்த வேண்டும். ரூ.5 லட்சத்திற்கு மேல் வருவாய் ஈட்டுவோராக இருந்தால் டிசம்பர் வரை ரூ.5 ஆயிரம் அபராதமும், ஜனவரியில் இருந்து மார்ச் மாதத்திற்குள் செலுத்தினால் ரூ.10 ஆயிரமும் அபராதமாக வசூலிக்கப்படும். 2023ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்கு பிறகு வருமானவரி தாக்கல் செய்ய முடியாது என அறிவிக்கப்பட்டுள்ளது.

Chella

Next Post

பேருந்து கவிழ்ந்து ஆற்றில் விழுந்து விபத்து.. 12 பேர் பலியான சோகம்..

Mon Jul 18 , 2022
மத்திய பிரதேசத்தில் பாலத்தில் இருந்து பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.. மத்திய பிரதேசம் மாநிலம் தார் அருகே கல்காட்டில் பாலத்தில் இருந்து நர்மதை ஆற்றில் பேருந்து கவிழ்ந்த விபத்தில் 12 பேர் உயிரிழந்தனர்.. இந்தூரில் இருந்து புனே நோக்கி சென்று கொண்டிருந்த போது இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.. பாலத்தின் சுற்றுச்சுவரை இடித்துக் கொண்டு ஆற்றில் பேருந்து விழுந்ததில் 40-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.. சுமார் […]

You May Like