ஓட்டுநர் உரிமங்களுக்கு ‘தகுதி மற்றும் குறைபாடு’ என்ற பிரிவை அறிமுகப்படுத்துவது தொடர்பாக சாலைப் போக்குவரத்து அமைச்சகம் ஆலோசித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் போக்குவரத்து விதிமீறல்களுக்கு ஏற்கனவே அபராதம் விதிக்கப்பட்டு வருகிறது. இருப்பினும், பொறுப்பற்ற முறையில் வாகனம் ஓட்டுதல் மற்றும் போக்குவரத்து விதிமுறைகளை மீறுதல் சம்பவங்கள் குறைந்தபாடில்லை. இந்நிலையில் தான், போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடுபவர்களை கட்டுப்படுத்த, ஓட்டுநர் உரிமத்தில் எதிர்மறை புள்ளிகள் முறையை அறிமுகப்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது சிக்னல்களை மீறுதல், வேகமாக செல்லுதல் போன்ற விதிமீறல்கள் தொடர்பாக கண்காணிக்கும். மேலும், உங்கள் லைசன்ஸ் எதிர்மறை புள்ளிகளைப் பெற்றிருந்தால், லைசன்ஸ் இடைநிறுத்தப்படலாம் அல்லது ரத்து செய்யப்படலாம். இந்தியாவில் ஆண்டுக்கு 1.7 லட்சத்திற்கும் அதிகமான விபத்துகள் நடப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன. எனவே தான், புள்ளிகள் முறைகளை அறிமுகப்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.
ஓட்டுநர் உரிமம் முறையை மாற்றியமைப்பதற்காக நடத்தப்பட்ட ஆலோசனைக் கூட்டத்தில் இந்த யோசனையை சாலைப் போக்குவரத்து அமைச்சகம் முன்வைத்துள்ளது. மேலும் புள்ளிகள் முறையைக் கொண்ட ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ஜெர்மனி, பிரேசில், கனடா உள்ளிட்ட நாடுகளுக்கும் சென்று அதிகாரிகள் ஆய்வு செய்ததாக கூறப்படுகிறது. எனவே, அடுத்த இரண்டு மாதங்களில் புதிய புள்ளி முறைகள் ஒருங்கிணைப்படும் என்றும் விரைவில் சட்டத்தில் திருத்தங்கள் செய்யப்படும் என்றும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதில், நல்ல முயற்சிகள் தகுதியான புள்ளிகளாகவும், ஊதா நிறங்கள் தகுதியற்றதாகவும் இருக்கும். புதிய அமைப்பின் ஒரு பகுதியாக, தங்கள் ஓட்டுநர் உரிமத்தைப் புதுப்பிக்க விரும்புவோருக்கும், குற்றத்தைச் செய்தவர்களுக்கும் கட்டாய ஓட்டுநர் சோதனைகள் இருக்கும். தற்போது, காலாவதியாகும் முன் உரிமத்தைப் புதுப்பிக்க விரும்புவோருக்கு ஓட்டுநர் சோதனைக்கு எந்த உத்தரவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
Read More : அமமுகவுக்கு மேலும் ஒரு விக்கெட்..!! அதிமுகவில் இணைந்தார் Walliya கணேசன்..!! காலியாகிறதா தினகரன் கூடாரம்..?