பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் குடியிருப்பு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரே குடும்பத்தை சேர்ந்த 3 பேர் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்ட்டுள்ளனர்.
ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் முழுவதும் 25க்கும் மேற்பட்ட நகரங்களில் பாகிஸ்தானின் ட்ரோன்கள் தொடர்ந்து இரண்டாவது நாளாக குறிவைத்து புதிய தாக்குதல்களை நடத்தி வருகிறது. இதனை இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் முறியடித்து, பல ட்ரோன்களை சுட்டு வீழ்த்தி வருகிறது. பொதுமக்கள் மற்றும் இராணுவ இலக்குகளுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்று சந்தேகிக்கப்படும் ஆயுதமேந்திய ட்ரோன்களும் இதில் அடங்கும்.
பாக்கிஸ்தான் தொடர்ந்த தாக்குதல் நடத்தி வருவதால் இன்றும் ஜம்மு-காஷ்மீர், பஞ்சாப், ராஜஸ்தான் மற்றும் குஜராத் உள்ளிட்ட எல்லையோர பகுதிகளில் சைரன்கள் ஒலிக்கப்பட்டு வருகின்றன. மேலும் நகரம் முழுவதும் இருளில் மூழ்கியுள்ளது. ஜம்மு காஷ்மீர், பஞ்சாப் மற்றும் ராஜஸ்தானில் உள்ள பல இடங்களை நோக்கி ஆளில்லா விமானங்களை ஏவி தாக்குதல் நடத்தி வருகிறது. மேலும் சிறு ஆயுதங்கள் மற்றும் பீரங்கி தாக்குதலாக்கையும் மேற்கொண்டு வருகிறது. இந்த தாக்குதலுக்கு இந்திய படை பதிலடி கொடுத்து வருகிறது.
பாரமுல்லா, ஸ்ரீநகர், அவந்திபோரா, நக்ரோட்டா, ஜம்மு, ஃபெரோஸ்பூர், பதான்கோட், ஃபாசில்கா, லால்கர் ஜட்டா, ஜெய்சால்மர், பார்மர், பூஜ், குவார்பெட் மற்றும் லக்கி நாலா உள்ளிட்ட 26 இடங்களில் ட்ரோன் தாக்குதல்கள் நடந்து வருகிறது.
குறிப்பாக பஞ்சாப் மாநிலம் ஃபெரோஸ்பூரில் குடியிருப்பு பகுதியில் நடந்த ட்ரோன் தாக்குதலில் ஒரே கும்பத்தை சேர்ந்த மூன்று பேர் காயமடைந்துள்ளனர். அதில் ஒரு பெண் உயிருக்கு ஆபத்தான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அந்த பெண்ணுக்கு அதிக தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளதாகவும், மற்ற இருவருக்கு குறைந்த அளவிலேயே தீக்காயங்கள் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
Firozpur में एक ड्रोन को मार गिराया, मार गिराने के बाद एक घर पर गिरा ड्रोन। एक युवक घायल हुआ।#IndiaPakistanWar #firozpur pic.twitter.com/QobFuaFqJv
— Aviral Singh (@aviralsingh15) May 9, 2025
ட்ரோன் தாக்குதலில் காயமடைந்த குடும்பத்தினர் குறித்து, ஃபெரோஸ்பூர் எஸ்எஸ்பி பூபிந்தர் சிங் சித்து கூறுகையில், “3 பேர் காயமடைந்ததாக எங்களுக்கு தகவல் கிடைத்தது. அவர்களுக்கு தீக்காயங்கள் ஏற்பட்டுள்ளன. மருத்துவர்கள் அவர்களுக்கு சிகிச்சை அளிப்பார்கள். பெரும்பாலான ட்ரோன்கள் ராணுவத்தால் செயலிழக்கச் செய்யப்பட்டுவிட்டன” என்று கூறினார்.
பாகிஸ்தான் தாக்குதலை தொடர்ந்து எல்லைப் பகுதிகளில் உள்ள குடிமக்கள், வீட்டிற்குள் இருக்கவும், தேவையற்ற நடமாட்டத்தைக் கட்டுப்படுத்தவும், உள்ளூர் அதிகாரிகள் வழங்கிய பாதுகாப்பு வழிமுறைகளை கண்டிப்பாகப் பின்பற்றவும் அறிவுறுத்தப்படுகிறார்கள். பீதி தேவையில்லை என்றாலும், அதிக விழிப்புணர்வு மற்றும் முன்னெச்சரிக்கை அவசியம் என்று பாதுகாப்பு வட்டாரங்கள் தெரிவித்துள்ளான்.
Read More: Explained : இந்தியா – பாகிஸ்தான் இடையே போர் தொடங்கிவிட்டதா? ஆம் எனில், யார் அதை அறிவிப்பார்கள்?