தெலங்கானா மாநிலம் ஜக்தியால் மாவட்டத்தில் லேசான நில அதிர்வு உணரப்பட்டதால் மக்கள் அச்சம். ரிக்டர் அளவில் 3.8ஆக பதிவானது. 10 வினாடிகள் உணரப்பட்ட இந்த நில அதிர்வால் பொதுமக்கள் அச்சமடைந்து தங்கள் வீடுகளை விட்டு வெளியேறினர்.
தெலங்கானா மாநிலம் கரீம்நகர், ராமதுகு, சொப்பந்தண்டி மற்றும் கரீம்நகர் மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளில் வசிப்பவர்கள் இரண்டு வினாடிகள் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டதாகவும், சொத்துக்களுக்கு சேதம் ஏற்பட்டதாகவோ அல்லது உயிரிழப்பு ஏற்பட்டதாகவோ உடனடி தகவல்கள் எதுவும் இல்லை. மாவட்ட தலைமையக நகரமான வவிலாலப்பள்ளி மற்றும் பேங்க் காலனியில் வசிக்கும் பலர் கட்டிடங்களின் அதிர்வுகளை உணர்ந்ததால் பீதியில் வீடுகளை விட்டு வெளியேறினர்.
நேற்று இரவு திடீரென பெய்த பலத்த காற்றுடன் கூடிய மழையால் நகரத்தின் பல்வேறு பகுதிகளில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. கும்ரம் பீம் ஆசிபாபாத் மாவட்டத்தில் மாலை 6.50 மணிக்கு 10 கி.மீ ஆழத்தில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக தேசிய நில அதிர்வு மையத்தை மேற்கோள் காட்டி வட்டாரங்கள் தெரிவித்தன. தெலுங்கானாவின் ஆசிபாபாத் மாவட்டத்தில் நேற்று மாலை 6:50 மணிக்கு ரிக்டர் அளவுகோலில் 3.8 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
அருகிலுள்ள பகுதிகளில் நிலநடுக்கம் உணரப்பட்டதாகவும், ஆனால் சொத்துக்களுக்கு சேதம் அல்லது உயிர் இழப்பு ஏற்பட்டதாக இதுவரை எந்த தகவலும் வரவில்லை என தெரிவித்துள்ளது.